அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, October 7, 2008

நவராத்திரியில் எமது மனங்களை அறிவோமா? - பகுதி 6

9. யாருடைய நம்பிக்கையையும் குலைக்காதீர்கள்

நீ எல்லாம் தெரிந்தவனாக இருக்கலாம். அதற்காக பிறரது எளிய களங்கமற்ற நம்பிக்கையைக் குலைக்காதே (3.26)
நீங்கள் வலிமைபடைத்தவராக இருந்தால் நல்லது. ஆனால் உங்களைப் போல வலிமையில்லாதவர்களைச் சபிக்காதீர்கள். ஒவ்வொருவரும் மக்களைப் பார்த்து நீங்கள் பயனற்றவர்கள் என்று சொல்கிறார்கள். உனக்கு உதவி செய்ய முடியாத நான்தான் பயனறஇறவன் என்று யார் சொல்கிறார்கள்? மக்கள் தங்கள் சக்திக்கும் பொருளுக்கும் அறிவுக்கும் தக்கவாறு சரியாகத்தான் செயல்படுகிறார்கள். என் நிலைக்கு அவர்களை உயர்த்த முடியாத நான் தான் உதவாக்கரை.
ஆகவே சடங்குகள் பல தேவதை வழிபாடு புராணங்கள் எதுவும் தவறில்லை என்கிறார் கிருஷ்ணர். ஏன்? ஏனெனில் எல்லாம் ஒரே இலஷியத்திற்குத்தான் இட்டுச் செல்கின்றன. சடங்குகள் சாஸ்திரங்கள் உருவங்கள் எல்லாம் சங்கிலியின் கண்ணிகள். அதைப் பிடித்தக்கொள். அதுதான் முக்கியம். நீ உண்மையாக இருந்து ஒரு கண்ணியைப் பற்றிக் கொண்டிருந்தாயானால் அதை விட்டுவிடாதே. மீதி தானே உன்னிடம் வரும். ஆனால் மக்கள் அதைப் பிடிப்பதில்லை. எதைப் பிடிப்பது என்பதைப் பற்றி சண்டை போட்டுக்கொண்டு காலத்தை வீணாக்குகிறார்கள். ஆனால் எதையும் பிடிப்பதில்லை. ஏதாவதொரு கண்ணியைப் பற்றுங்கள். உது உங்களை மையத்திற்கு இட்டச் செல்லும். முற்றவற்றை உங்கள் இதயமே உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்.
யார் எந்த உருவில் என்னை வழிபட விரும்பினாலும் அந்த உருவில் அவனுக்கு நான் சிரத்தையைக் கொடுக்கிறேன். அதன் மூலம் அவனை நான் சந்திக்கிறேன். (4.11) என்று அவர் கூறுகிறார். அவருடைய இதயம் எல்லா பாமரர்களுக்காகவும் உருகுகிறது.

No comments: