அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, October 18, 2008

இசைஞானிமீது தவறு கூறிய அடியேனை தயவுடன் வாசகர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.

கடந்த 18.08.2008 கிருத்தியத்தில் இசைஞானி இளையராஜா அவர்;கள் திருவாசகத்தின் - சிவபுராணத்தில் தவறு இழைக்கலாமா? என்ற ஒரு தலைப்பிலான பதிவை நான் பதிவிட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கும் என நம்புகிறேன். திருவாசக ஒலிப்பதிவு விழா சம்பந்தமான ஒளிநாடாவைப் பார்த்த எனக்கு ஒரு படிப்பினை ஏற்பட்டது.

தமிழ்மையம் இதனை தன்னுடைய முழுச் சக்தியையும் அர்ப்பணித்து பணிபுரிந்ததை உணர்ந்தபடியால் எனது பதிவில் இசைஞானி இளையராஜா அவர்;கள் திருவாசகத்தின் - சிவபுராணத்தில் தவறு இழைக்கலாமா? என்ற தலைப்பிட்டு எழுதிய செய்திக்கு வாகசர்களிடம் தயவாக அதை மன்னிக்குமாறு பகிரங்கமாக இத்தால் வேண்டுகிறேன்.

அவர்களுக்கு எழுதிய கடிதத்தையும் வாகசர்களுக்காக இங்கு சேர்க்கின்றேன்.

சுவிற்சர்லாந்து,
17.10.2008. ஐப்பசி வெள்ளி.

திருவருளும் குருவருளும் முன்னிற்க!

வண. அருட்தந்தை. ஜெகத் கஸ்பார்ராஜ் அவர்கள்,
நிர்வாக இயக்குனர்,
தமிழ் மையம்
இல. 153, லுட்ச் சேர்ச் வீதி,
சென்னை – 4.

பேரன்புக்கும் பெருமதிப்பக்கும் வணக்கத்திற்குமுரிய அருட்தந்தை. ஜெகத் கஸ்பார்ராஜ் அவர்களுக்கு,
வணக்கம்.
தங்களுடைய திருவாசக ஒலிப்பதிவு நாடாவைக் கேட்ட நான் கடந்த 11.10.2008 சனிக்கிழமையே ஒளிப்பதிவு நாடாவைப் பார்க்கக் கூடிய பாக்கியம் கிடைத்தது. ஒலிப்பதிவைக் கேட்டவுடனேயே எனது கிருத்திய வலைப்பதிவுத்தளத்தில் இசைஞானி இளையராஜா அவர்;கள் திருவாசகத்தின் - சிவபுராணத்தில் தவறு இழைக்கலாமா? என்ற ஒரு தலைப்பில் கட்டுரையை எழுதியிருந்தேன்.

தங்களுடைய முன்னுரையுடன் ஆரம்பிக்கும் இந்நாடாவில் இசைஞாளியினுடைய ஆரம்ப பேச்சும் வண. அருட்திரு. வின்சென்ட் சின்னத்துரை அவர்களது வரவேற்பும் வழிகாட்டிய குரு சிவத்திரு. தட்சணாமூர்த்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ பீற்றர் அல்போனஸ் இசைவிற்ப்பன்னர் திரு. பாலமுரளிகிருஷ்ணா பத்திரிகையாளர் திரு. என். ராம் தகவல் ஒலிபரப்பு மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மேன்மைதங்கிய ஜெயபால் ரெட்டி பத்மஸ்ரீ திரு. கமல்ஹாசன் இயக்குனர் சிகரம் திரு. பாரதிராஜா சூப்பர் ஸ்ரார் திரு. ரஜினிகாந்த் மதிமுக பொதுச்செயலாளரும் மிகச் சிறப்பான சைவப் பிரசங்கம் நடத்திய சிவத்திரு. வை. கோ இசைப்பிரவாகம் - இசைஞானி இளையராஜா நன்றியுரை பகிர்ந்த வண. அருட்திரு. ஆனந்தம் போன்றோருடைய பேச்சின் ஆழத்தை மிக மனதார கேட்டுணர்ந்த நிலையில் இம்மடல் தங்களுக்கு எழுதப்படுகிறது.

இசைஞானியவர்கள் ஓரிடத்தில் குறிப்பிட்டதுபோல பாதிரியார் அரசியல் பேசியதும் - அரசியல் தலைவர் ஆன்மீகம் பேசியதும் ஒரு வரலாறு. விழாவில் தாங்கள் பாடிய நான் யார் என் உள்ளம் யார் ஞானங்கள் யார் என்னை யார் அறிவார் என்ற அந்த மகா தத்துவ வரிகளை மீட்டுப் பார்க்கின்றேன்.

மற்றுப் பற்றெனக் கின்றி நின் திருப் பாதமே மனம் பாவித்தேன் பெற்றலும் பிறந்தேன் இனிப்பிறவாத தன்மை வந்தெய்திய – அந்த உணர்வு - இயக்குனர் சிகரம் கூறிய அந்த வரிகளை அனுபவித்தேன்.

தாங்கள் இறுதியில் குறிப்பிட்ட - இந்தப் பணியில் நாம் எதிர்கொண்ட வலிகள் வேதனைகள் அவமானங்கள் என்ற பொழுது என்னை யாரோ சம்மட்டியால் ஓங்கி அடித்ததுபோன்ற உணர்வு ஏற்பட்டமையாலே இக்கடிதத்தை எழுத விரும்பினேன். நான் ஏற்கனவே இசைஞானியிடம் கோரிய வேண்டுதலையும் அவர்மீது கண்ட தவறையும் எனது அறியாமையினால் தங்களிடத்தில் பாவமன்னிப்பாக (தங்களுடைய நெறியிலே பரிகாரம் இருப்பதை நான் அறிந்தபடியால்) தாங்கள் ஏற்று இச்சிறியேனின் பெரும் பிழையைப் பொறுக்க வேண்டும் எனத் தயவாக வேண்டுகிறேன்.

தங்களின் அப்பழுக்கற்ற தூய தமிழிசைப் பணியில் எம்மால் முயன்ற உதவியைச் செய்வோம் என உறுதியுரைத்து தஙஇகள் தமிழ்ப் பணிசிறக்க எல்லாம் வல்ல இந்த இறையருளை மனதார வேண்டி இக்கடிதத்தை நிறைவு செய்கின்றேன். நன்றி. வணக்கம்.

தங்களுண்மையுள்ள,
தங்க. முகுந்தன்.

No comments: