அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, October 6, 2008

இன்று நவராத்திரி – 7ம் நாள் மகா சரஸ்வதிதேவி பூஜை ஆரம்பம்

இன்று ஆரம்பமாகும் மகா சரஸ்வதிதேவிக்குரிய மூன்றுநாட் பூசையில் எமது பிரார்த்தனை!

கல்விக்கு அதாவது மனிதரை நல்வழிப்படுத்தும் அறிவு – சிந்தனை – ஞானம் எனப்படும் இந்த ஆறாவது அறிவைப் பற்றி நாம் இன்றைய நாளில் சற்று அமைதியாக தனித்திருந்து ஆராய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

ஆக்கத்திற்கு வழிகாட்ட வேண்டிய அறிவு இன்று அழிவுகளுக்கும் அனர்த்தங்களுக்கும் பெருந்துன்பத்துக்கும் ஆளாகி மக்களை சொல்லொணாத துயரத்தில் இருக்கவைத்துள்ளது. எங்க பார்த்தாலும் ஒற்றுமையின்மையும் போர்களும் அழிவுகளுமாகவே இருக்கிறது.

குமரகுருபர சுவாமிகள் தனது சகல கலா வல்லிமாலையின் கடைசிப் பாடலில்
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்டளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடியுண்டேனும் விளம்பில் உன் போற்
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலா வல்லியே!

அறிவினுடைய திறம் எங்கு சென்றாலும் மரியாதைக்குரியதாகிறது. இன்று அறிவைப் பற்றிப் பூரணமாக அறியாதவர்கள் - அறிவுள்ள அறிஞரை மதியாது தாம் நினைத்தபடி அவர்களைப் புறக்கணித்து தமது எண்ணப்படி திட்டங்கள் தீட்டுவதாலும், செயற்படுவதாலும் அழிவுகள் - அதிகரித்து நாடும் உலகமும் அமைதியை வேண்டி அங்கலாய்க்கிறது.

மன அமைதிக்கு இன்றைய நாளில் அன்னையின் திருநாமங்களை ஓருமனதாக திரிகரண சுத்தியோடு பாராயணம் செய்வோமாக!

அம்மணி! ஜெகதாம்பிகே! கருணாகரி! பரமேஸ்வரி!
கண்மணி! ஜெயகௌரி! காங்கயி! கார்த்திகே! திரிநேத்திரி!
தண்மயீ! உபசாந்தினி! சிவசாம்பவீ! ஏகாம்பரீ!
சின்மயீ! சுபசீலி! மாலினி! தேவி! சௌந்தரி ஓம் நமோ!

பத்ரகாளி! துர்க்கா! புவானி! பராசக்தி! புரிபாலினி!
சித்சொரூபிணி! சிம்மவாகினி! திவ்ய ராஜராஜேஸ்வரி!
வித்வ பூஷணி! மீன லோசனி! வீரமர்த்தனி! விமலினீ!
சத்ய வாசனி! நித்ய கன்னி! தயாபரீ! நம ஓம் நமோ!

குண்டலீ! சந்த்ர மண்டலீ! இளங்கோமளீ! இன்ப சியாமளீ!
சண்டிகா! சாமுண்டி! பைரவி! சாவித்ரி! ஜெயகாயத்ரீ!
அண்டர் நாயகி! ஆபத் பாந்தவி! அமுதஞான பயோதரீ!
தொண்டர் சாதகி! தூய வானதி! சோமசேகரி! ஓம் நமோ!

சுத்த சக்தி! சுடர்க்கொடி! திவ்ய சுந்தரீ! ஸ்ரீ புராந்தகீ!
வித்தகீ! தெய்வ நர்த்தகீ! ஜய விஜயி! பாப விநாசினி!
சித்ர ரஞ்சனி! தெய்வ குஞ்சரி! தேவதா! உமா! பார்வதீ!
நித்ய வாணி! நிரஞ்சனீ! மலைநீலி! சங்கரி! ஓம் நமோ!

சந்த்ர மொளலி! சரஸ்வதி! திவ்ய சாரதா! ஜெய பாரதீ!
சுந்தராங்கி! சுரர்நுதா! விஸ்வசோபிதா! சாம்ப்ர பாவதீ!
மந்த்ர ரூபிணி! மா பகவதீ! மஹிஷாசுர மர்த்தனீ!
தந்த்ர சாதனி! செஞ்சடாதரி! சர்வதாரகி! ஓம் நமோ!

அஷ்ட லட்சுமி! அபய ஹஸ்தனி! அமலினீ! செங்கமலினீ!
நிஷ்டை யோகினி! நுpமலவாகினி! நிஷ்களங்க சந்யாசினி!
துஷ்ட நிக்ரகி! தூய வைஷ்ணவி! சோதி! வேணி! சுமங்கலீ!
சிட்டரட்சகி! ஸ்ரீ வராகினி! சீதளீ! நம ஓம் நமோ!

பூரணீ! ஞான பூஷணீ! வேத போதினீ! தர்மசாதனீ!
ஆரணீ! நவசீரணீ! உலகாண்டவீ! உக்ர தாண்டவீ!
காரணீ! சிவகாமினீ! ஜீவகாருணி! ஜெகன் மோகினீ!
தாரணீ! பவதாரணீ! புவிநாயகி! நம ஓம் நமோ!

No comments: