அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, October 13, 2008

நாமக்கல் கவிஞரின் காந்தி அஞ்சலி – 9

பாடமெல்லாம் காந்திமயம் படிக்கவேண்டும்
பள்ளியெல்லாம் காந்திவழி பழகவேண்டும்
நாடகங்கள் காந்திகதை நடிக்கவேண்டும்
நாட்டியத்தில் காந்தி அபிநயங்கள் வேண்டும்
மாடமெல்லாம் காந்திசிலை மலியவேண்டும்
மனைகளெல்லாம் காந்திபுகழ் மகிழவேண்டும்
கூடுமெல்லா வழிகளிலும் காந்தி அன்புக்
கொள்கைகளே போதனையாய்க் கொடுக்க வேண்டும்.

கல்வியெல்லாம் காந்திமணம் கமழவேண்டும்
கலைகளெல்லாம் காந்திமணம் கமழவேண்டும்
சொல்வதெல்லாம் காந்தி அறம் சொல்லவேண்டும்
சூத்திரமாய் காந்திஉரை துலங்கவேண்டும்
வெல்வதெல்லாம் காந்திவழி விழையவேண்டும்
வேள்வியென்றே அவர்திருநாள் விளங்கவேண்டும்
நல்வழிகள் யாவினுக்கும் நடுவாய் நின்ற
நாயகனாம் காந்தி சொன்ன நடத்தைவேண்டும்.

No comments: