அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, October 8, 2008

நாமக்கல் கவிஞரின் காந்தி அஞ்சலி – 7

மதம் எனுமோர் வார்த்தையையே மறந்து வாழ்ந்தான்
மாசறியா அன்பினையே வளர்த்த வள்ளல்
சதமெனுமோர் சத்தியத்தைச் சார்ந்திடாத
சடங்குகளை விட்டொழிக்கச் சக்தி தந்தான்
விதவிதமாய் உடைநடைகள் விரிந்திட்டாலும்
வேற்றுமையுள் ஒற்றுமையே விளக்கிவைத்தான்
இதம் மிகுந்த காந்தி எம்மான் சரித்திரந்தான்
இந்நாட்டின் வேதமென இசைக்க வேண்டும்.

ஜாதி குலம் பிறப்பையெண்ணும் சபலம் விட்டோன்
சமதர்ம சன்மார்க்கம் சாதித்திட்டோன்
நீதி நெறி ஒழுக்கமென்ற நிறைகளன்றி
நேர்மையற்ற தேர்வுகளை நீக்கிநின்றோன்
ஆதிபரம் பொருளான கடவுட்கல்லால்
அகிலத்தில் வேறெதற்கும் அஞ்சா சுத்தன்
ஜோதி பெருங் கருணை வள்ளல் காந்தி சொல்லே
சுருதியென மக்களெல்லாம் தொழுதல் வேண்டும்.

No comments: