அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, October 17, 2008

நாமக்கல் கவிஞரின் காந்தி அஞ்சலி – 11

சத்தியமே தம்முடைய தெய்வமாக
சாந்தநிலை குலையா நல் தவசி காந்தி
இத்தகைய மரணமுற்றதேனோ என்று
இறைவனுக்குச் சாபமிட்டு ஏங்குகின்றோம்
பக்தர்கள்தாம் கோருகின்ற படியே முத்தி
பாலிப்பதன்றோ அப்பகவான் வேலை
அத்தகைய சாவேதான் அடைய வேண்டி
ஆசைசொன்னார் காந்திஅதை அமலன்ஈந்தான்.

கூழுமின்றிப் பரிதவிக்கும் ஏழைமக்கள்
குறைதீர்த்துப் பொய் சூது கொலைகள் நீக்கி
வாழுமுறை இன்னதென வாழ்ந்துகாட்டி
வானுறையும் தெய்வமென எவரும்வாழ்ந்த
மாழும்முறை இதுவெனவே மனிதர்போற்ற
மாநிலத்தில் கண்டறியா மரணம் ஏற்றான்
நாளும்அவன் பெரும்புகழை நயந்துபோற்றி
நானிலத்தோர் நல்வாழ்வு நாடவேண்டும்.

No comments: