அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, October 7, 2008

நாமக்கல் கவிஞரின் காந்தி அஞ்சலி – 6

வீரமென்றும் வெற்றியென்றும் கோபமூட்டி
வெறிகொடுக்கம் பேச்சையெல்லாம் விலக்கி எங்கும்
ஈரமுள்ள வார்த்தைகளை எவர்க்கும் சொல்லி
இனிமைதரும் காந்தியைப்போல் இரக்கம் வேண்டும்
காரமுள்ள கடும்சொல்லைக் கேட்டிட்டாலும்
காந்தியைப்போல் கலகலத்துச் சிரித்துத் தள்ளி
பாரமற்ற மனநிலையைப் பாதுகாத்து
பகைமையெண்ணாக் காந்திமுறை பயிலவேண்டும்.

பொது நலத்தைக் காந்தியைப்போல் பொழுதும் எண்ணி
பொறுப்புணர்ந்து சேவைகளைப் புரியவேண்டும்
பொதுப் பணத்தைக் கண்போலப் போற்றி எந்தப்
பொழுதும் அதன் கணக்குகளைப் பொறித்துநீட்டி
துதிப்பதற்கோ தூற்றுதற்கோ கொடுத்திடாமல்
தூய்மையுள்ள அறங்களுக்குத் துணைமையாக்கும்
மதிநலத்தைக் காந்தியைப்போல் மனதிற் காத்து
மக்களுக்குத் தொண்டு செய்வோர் மலியவேண்டும்.

No comments: