அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, October 17, 2008

பாரதத்தின் மீது குறை சொல்லுவோருக்கு ஒரு பதில்

செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே என்ற மகாகவி பாரதியினுடைய தமிழ்ப்பாடலை நாம் தமிழ்ப் பாடத்திலும் சங்கீதப் பாடத்திலும் பாடமாக்கிவை. இதிலே எங்கள் தந்தையர் நாடென்னும் போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்ற வரிகளும் வரும். தாய்நாடான நமக்கு தந்தை நாடு பாரதம் என்று உணர்வு என்றும் உண்டு. அந்த ரீதியில் தமிழர்கள் துன்பப்பட்ட வேளைகளிளெல்லாம் முன்னர் பிரதமர் நேரு, அன்னை இந்திராகாந்தி, பெரியார் இராஜகோபாலாச்சாரியார், கவிஞர் கண்ணதாசன், பேரறிஞர் அண்ணா, பெரியார் ஈ. வே. ரா, பெரியார் காயிதே மில்லத், திரு. மா. போ. சிவஞானக்கிராமணியார், திரு. எம். பக்தவத்சலம், திரு. எம். ஜி. இராமச்சந்திரன், பிரதமர் ராஜீவ் காந்தி, திரு. என்.டி.ராமராவ், திரு. நரசிம்மராவ், திரு. ராஜாராம், திரு. அப்துல் சமது, திரு. கி. ஆ. பெ. விஸ்வநாதம், திரு. சோ, திரு. ராம், திரு. கல்யாணசுந்தரம், திரு. குமரி ஆனந்தன், திரு. இரா. நெடுஞ்செழியன், திரு. இரா. செழியன், திரு. வை.கோ, திரு. பழ. நெடுமாறன், திரு.கி. வீரமணி, திரு. மணியன், திரு. ஆர். வெங்கட்ராமன் திரு. சிவனாண்டி, நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் போன்ற நடிகர்கள் மற்றும் பலருடன் குறிப்பாக தற்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆகியோர் தந்தை செல்வா காலந்தொட்டு எமது பிரச்சனைகளில் அதிக அக்கறை காட்டியவர்களில் என்னுடைய நினைவுக்கு வந்தவர்களின் பெயரை குறிப்பிட்டிருக்கின்றேன். இன்று பலருக்கு முன்னர் பாரதம் இலங்கைப் பிரச்சனையில் ஈடுபட்ட வரலாறு தெரியாமலிருக்கலாம். வரலாறுகள் பல தெரியாமல் ஒரு சிலரால் மறைக்கப்பட்டிருந்தாலும் நாம் வரலாற்றை மாற்றமுடியாது. அண்மையில் முதல்வர் கலைஞர் கருணாநிதி கூட்டிய மாநாட்டில் கலைஞரின் முழுப்பேச்சும் இலங்கைப் பத்திரிகைகளில் குறிப்பாக தமிழ்ப்பத்திரிகைகள் வெளியிடவில்லை. இதுதான் எனது பத்திரிகைகள் மீதான கோபத்திற்குக் காரணம்.

தந்தை செல்வாவுடைய சரித்திரத்தை எழுதிய பத்திரிகை ஆசிரியர் ரி. சபாரத்தினம் அவர்கள் அந்நூலில் என்னுரையில் மூன்றாவது பந்தியில் குறிப்பிட்டவற்றை நியாயத்திற்காக இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

ஒரு நல்ல பத்திரிகையாளனின் பணி ஆய்வில் ஈடுபடுவதல்ல. அதைச் செய்ய நிறையப்பேர் இருக்கிறார்கள். பத்திரிகையாளனின் பணி, தான் மிக அருகே நின்று பார்த்தவற்றைப் பதிவுசெய்து வைப்பதே. பத்திரிகையாளனுக்குக் கிடைக்கும் அந்த அருமையான சந்தர்ப்பம் ஆய்வாளர்களுக்குக் கிடைப்பதில்லை.

மிகுதி பின்

No comments: