அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, October 15, 2008

தமிழகத் தலைவர்களின் சாதுரிய புத்தி இலங்கைத் தமிழர் பிரதிநிதிகளுக்கு எப்போது ஏற்படும்?

கடந்த 18 செப்டெம்பரில் யாராவது முன்வருவீர்களா என்ற தலைப்பிலும் செப்டெம்பர் 10;ந்திகதி மனிதாபிமான பகிரங்க வேண்டுகோள் என்ற தலைப்பிலும் இரண்டு செய்திகளை எனது கிருத்தியத்தில் பதிவிட்டேன். எமது நாட்டில் தமிழ் மக்களின் வாழ்வு இன்று கேள்விக்குரியதாக இருக்கின்ற மிகவும் ஒரு பயங்கரமான காலகட்டத்தில் அனைத்து தமிழக கட்சிகளும் ஒன்றிணைந்து இப்படியான ஒரு திட்டத்தை ஏற்படுத்தியதுபோல ஏன் இலங்கைத் தமிழ்க் கட்சிகளும் தமிழ்ப்பேசும் முசுலிம் கட்சிகள் மற்றும் இடதுசாரிக்கட்சிகள் தமக்குள் ஒரு சந்திப்பை ஏற்படுத்த தவறின என்று ஒரு பாரம்பரியக் கட்சியின் உறுப்பினர் என்ற வகையில் வினவவிரும்புகின்றேன். தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற கோரிக்கையை முன்வைத்த தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சி ஏன் பேச்சுவார்த்தைகளுக்கு ஏனைய கட்சிகளுடன் சேராமல் தனித்து இயங்குகிறது. மக்களின் அன்றைய நிலையையும் எதிர்கால நிலையையும் யோசித்துப் பணிபுரிந்த தந்தையின் தீர்க்க தரிசனத்தை முற்றாகவே நிராகரித்து மக்களை வாட்டிவதைக்கின்ற நடவடிக்கைகளுக்கு துணைபோகும் தற்போதைய தமிழரசுக் கட்சியினர் இனிமேலாவது தந்தையின் இறுதிப் பேச்சுக்களை பொறுமையுடன் விளங்கி வாசித்து மக்கள் சேவை புரிய வேண்டும் என தந்தை செல்வாவின் பெயரால் தாழ்மையுடன் அப்பாவிப் பொது மக்களுக்காக வேண்டுகிறேன்.

No comments: