அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, October 5, 2008

நாமக்கல் கவிஞரின் காந்தி அஞ்சலி – 4

எத்தொழிலைச் செய்தாலும் காந்தியைப்போல்
எஜமானர் கடவுளென்று எண்ணவேண்டும்
சத்தியத்தைக் கருணையுடன் சாதித்திட்டால்
சரியாக மற்றதெல்லாம் சாயும் என்ற
பத்தியத்தைக் காந்தியைப்போல் நிலைக்கவேண்டும்
பாதகமோ சாதகமோ பலன்களெல்லாம்
நித்தியனாம் சர்வேசன் கடமையென்ற
நிஜபக்தி காந்தியைப்போல் நிலைக்கவேண்டும்.

உழைப்பின்றிச் சுகம் விரும்பல் ஊனம் என்று
காந்தியைப்போல் எல்லோரும் உணரவேண்டும்
அழைப்பின்றித் துன்பமுற்றோர் அருகில் ஓடிக்
காந்தியைப்போல் அவர்க்குதவும் அன்புவேண்டும்
பிழைப்பின்றிப் பரதவிக்கும் ஏழை மக்கள்
பின்பற்றிக் கைத்தொழிலின் பெருமைகொண்டு
களைப்பின்றிப் பசிதீரும் வழியைக்காட்ட
காந்தியைப்போல் கைராட்டை நூற்கவேண்டும்.

No comments: