அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, August 10, 2008

ஹிந்துக் கோவில்களுடன் ஹிந்துசமுதாயத்தின் உறவு

ஹிந்துக் கோவில்களுடன் ஹிந்துசமுதாயத்தின் உறவு

முன்னாளில்

கோவில்கள் ஹிந்துக்களின் சமுதாய வாழ்வோடு இரண்டறப்பிணைந்திருந்தன. எந்த ஒரு காரியமும் கோவிலும் பூஜாரியும் கோவில் தர்மகர்த்தாவும் சம்பந்தப்படாமல் ஊரில் நடப்பதில்லை.

தனிநபர் சம்பந்தப்பட்ட கல்யாணம் மரணம் போன்றவையானாலும் பொதுக்காரியமான வழக்கு நியாயத் தீர்ப்பு போன்றiயானாலும் கோவிலை மையமாக வைத்தே நடந்தன.

எல்லாக் கலைகளையும் மாணவர்கள் கற்பதும் கோவிலிலேயே நடந்தது. நாடகம் நடனம் இசை விருந்துகள் மருத்துவம் இலக்கிய விவாதங்கள் தத்துவ ஆராய்ச்சிகள் காவிய அரங்கேற்றங்கள் வேள்விகள் முதலியனவும் கோவிலிலேயே நடந்தன.

ஒவ்வொரு நிகழ்ச்சியும் கோவிலில் நடக்கும் போது முதலிலும் இடையிலும் கடையிலும் இறைவனின் வழிபாட்டுடனேயே நடந்தன.

ஹிந்து சமுதாய வாழ்க்கையின் ஒவ்வொரு சடங்கிலும் கோவிலும் இறைவழிபாடும் பின்னிக் கிடந்ததால் இந்து ஒவ்வொருவனும் இந்து சமயம் என்னும் பரந்து விரிந்த பெரும் ஆலமரத்தின் நிழலிலேயே வாழ்ந்திருந்தான்.

கோவில் ஊராரின் பொது இடம் அனைவருக்கும் உரிமைப்பட்ட இடம் அதனால் கோவிலில் நடக்கும் நிகழ்ச்சிகளும் அனைவரும் பங்கு பெறும் பொது நிகழ்ச்சியாகவே நடந்தது.

இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஊர்;மக்கள் அனைவரும் பங்கு பெறும்போது இந்துக்களிடையே உருவான ஆழ்ந்த பிணைப்பும் பாசமும் ஒற்றுமையும் அவர்களது சக்தியையும் அறிவையும் வலுப்படுத்தின.

ஒவ்;வொரு சிற்றூரிலும் தனித்தனியே கோவிலை மையமாக வைத்து வாழ்ந்த இந்துக்கள் வருடத்தில் ஓரிருதடவைகள் பெரிய கோவில் திருவிழாக்களை மையமாக வைத்து லட்சக்கணக்கில் ஒன்றாகத்; திரண்டனர். மிகப்பெரிய தேர்களை உருவாக்கி அனைத்து இந்துக்களும் கூட்டமாhகச் சேர்;ந்து இழுத்து இறைபக்தியையும் ஒற்றுமையையும் புதுப்பித்துக் கொண்டனர். இப்படி ஒரு வட்டாரத்தில் உள்ள பல சிற்றூர் மக்கள் தேர்;த் திருவிழாக்களில் ஒன்றாகக் கலக்கமுடிந்தது.

பாரதக்கண்டத்திலும் இமயமலைமுதல் கன்னியாகுமரி வரையிலும்; இந்துக்களின் கலாச்சாரம் செழிக்கவும் பரஸ்பர பாச உணர்வும் ஒற்றுமையும் வளரவும் கோவில் வழிபாடுகளே மையமாக அமைந்தன.

காஷமீரத்து இந்துக்கள் கால்நடையாக கன்னியாகுமரிக்கும் ராமேஸ்வரத்துக்கும் காசிக்கும் வந்தனர். கன்னியாகுமரி இந்துக்களும் அதேபோல கால்நடையகவே கைலாயம் வரை சென்றனர்.

பல மாதங்களும் வருடங்களும் பிரயாணத்தில் செலவுசெய்த இந்துக்கள் அகண்ட பாரதம் முழுவதிலும் ஒரேமாதிரியான ஹிந்து சமய நெறியைப் பரப்பிச் சீர்படுத்தினர்.

ஆன்மநேய ஒருமைப்பாடும் விருந்தோம்பலும் பண்பும் பாசமும் இதனால் ஹிந்துக்களிடையே வளர்ந்தோங்கி இருந்தன. மகா காவியங்களான இராமாயணமும் மகாபாரதமும் கோவில்களில் படித்துப் பொருள் சொல்லப்பட்டன.

இதனால் இளம் உள்ளங்களில் பெற்றோரைப் பற்றிய பாசமும் சகோதர பாசமும் வீரமும் இறை உணர்வும் விதைக்கப்பெற்றன.

கோவிலில் பூஜை செய்யும் பூஜாரி ஒழுக்கத்தின் சின்னமாகவும் மேன்மகனாகவும் வேதங்களை அறிந்தவனாகவும் பாமர இந்துக்களுக்கு அறிவு சொல்லும் ஆசானாகவும் இருந்தார்.

கோவில் பூஜாரிக்கும் ஊர்மக்களுக்கும் இருந்த இறுக்கமான பிணைப்பால் கோவிலின்பால் இருந்த பக்தி மக்களுக்கு மேலும் வளர்ந்தது. கோவில் தர்;மகர்த்தாவும் அதுபோலவே மேன்மகனாhகவும் திறமை வாய்ந்தவனாகவும் இருந்தார். இதனால்; நாத்திகர்களும் இறைவழியாட்டைக் கிண்டல் செய்யும் பேர்வழிகளும் இல்லாதிருந்தனர்.

கோவிலில் ஒருநாளில் குறிப்;பிட்ட நேரங்களில் மட்டுமே இறைவனுக்குத் தீப ஆராதனையும் வழிபாடும் நடந்தன. இறைவனுக்கு அலங்காரம் செய்து நடை திறக்கப்படும் வரை அனைத்து பக்தர்களும் அங்கே கூடியிருந்து தங்களுக்குள் அமைதியாக அளவளாவி பஜனைசெய்து உபன்னியாசம் கேட்டு நேரத்தைச் செலவழித்தனர்.

அலங்காரம் முடிந்து நடைதிறந்ததும் எல்லோரும் ஒரே நேரத்தில் கூட்டமாக சுவாமி தரிசனம் செய்தனர்.

இப்படி ஒரேநேர சுவாமி தரிசனம் மட்டும் இருந்ததால் இந்துக்கள் அந்த நேரத்தில் கட்டாயமாக ஒன்றுசேர்ந்து தங்களுக்குள் பழகி ஒருவர் மற்றவரை அதிகம் தெரிந்து கொள்ள வாய்ப்பிருந்தது.

இந்நாளில்

ஆனால் இந்hளில் ஹிந்துக்களின் முந்தைய நடைமுறைகள் மாற்றப்பட்டுவிட்டன. ஹிந்து சமுதாயத்தின் ஒற்றுமையைக் குலைத்து பாரதத்தின் சக்தியை மழுங்கடிக்கும் திட்டத்தைத் தீட்டிய ஆங்கிலேயக் கிறீஸ்தவர்கள் மிக புத்திசாலித்தனமாகச் செயல்பட்டனர்.

ஹிந்துக்களையும் அவர்களது கோவிலையும் தனித்தனியாகப் பிரித்தனர். கோவில் வேறு சமுதாயம் வேறு என்னும் சிந்தனையை சிறுகச்சிறுக ஊட்டினர்.

இதனால் இன்று ஹிந்துக் கோவில்கள் இந்துக்களின் கையில் இல்லை. அரசாங்கத்தின் கையில் இருக்கிறது. அரசியல்-வாதிகளாகவும் நாத்திகர்களாகவும் பணப்பேய் பிடித்து அலைபவர்களாகவும் இருப்பவர்கள் கூட கோவில் தர்மகர்த்தா ஆகிவிடுகிறார்கள். தர்மகர்த்தாவுக்கு கோவில் விவகாரமும் தெரியாது சமுதாய விவகாரமும் தெரியாது. இன்றைய தர்மகர்த்தாக்களே இந்து சமுதாயத்தை இந்துவின் கோவில்களிலிருந்து தூரத்தூர விலகிப்போகும்படி செய்து கொண்டிருக்கிறார்கள்.

கோவில் பூஜாரிக்கும் கும்பிட வருகிறவனுக்கும் தொடர்பே இல்லை. பக்தர்களின் இன்ப துன்பங்களில் பங்குகொண்டு அவர்களது சமுதாய வாழ்வில் முன்னின்று உதவிசெய்து எல்லோருக்கும் நல்லோனாக இருந்த முன்னாளைய பூஜாரி பின்னாளில் கோவிலை விட்டு வெளியே வராதவனாகவும் பிறர் கை பட்டால் தீட்டு பட்டுவிடும் என்று ஒதுங்கி ஓடுகிறவனாகவும் ஆனான்.

பக்தனிடம் அன்புடன் பழகி ஆறுதலும் அறிவும் சொல்லவேண்டிய பூஜாhரி பக்தன் கையிலிருக்கும் அர்ச்சனைத் தட்டை மட்டுமே - அதிலிருக்கும் தட்சணையை மட்டுமே பார்க்கும் சுயநலக்காரனாக ஆனான் அல்லது ஆக்கப்பட்டான்.

பூஜாரி ஹிந்து சமுதாயத்துடனுள்ள தொடர்பை ஜாதியின் பெயராலும் ஆச்சாரத்தின் பெயராலும் அறுத்துக் கொண்ட நாள் முதல் இந்துக்களின் பலம் குன்ற ஆரம்பித்தது.

ஒரே நேரம் நடைதிறந்து எல்லோரும் கூட்டுவழிபாடு நடாத்தும் நிலை மாறி, எந்த நேரத்தில் யார் வந்தாலும் அர்ச்சனை செய்யவும், வழிபாடு என்ற பெயரால் ஏதோ செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டது.

பக்தன் பத்துக் காசை தட்டில் போட்டவுடன் பூஜாரி சூடம் காண்பித்துவிடுவதால் வந்தவனுடைய வழிபாடு பத்து நிமிடத்தில் முடிந்துவிடுகிறது.

இதனால் கோவிலுக்கு வருகிற பக்தனுக்கு கோவிலைப் பற்றியோ, கோவிலுக்கு வரும் மற்ற பக்தர்களைப் பற்றியோ, இந்து சமுதாயத்தைப் பற்றியோ எந்த சிந்தனையும் செய்ய வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

தன்னுடைய சுயநன்மைக்காக, குடும்ப நன்மைக்காக பிரார்த்தனை செய்து, பலனடைவதே பக்தி என்று நம்பத்தொடங்கினர் மக்கள்.

கோவிலில் ஒன்றாகக் கூடுவதும், சேர்ந்து இருப்பதும் போன்ற சந்தர்ப்பங்கள் இல்லாமல் போய்விட்டன. உண்மை பக்தி என்பதை விளக்குவார் இல்லாமல் ஆனது.

தர்மகர்த்தா தரம் கெட்டுப் போனதால் ஊர் வழக்குகள் கோவிலில் தீர்க்கப்படுவதில்லை. இதனால் இளைஞர்கள் பெரியோர் சொல் கேட்பதில்லை.

நகைகள் சில பக்தர்கள் அபரிதமான பக்தியால் தங்க நகைகளையும், விலை உயர்ந்த பொருட்களையும் சுவாமிக்கு அலங்காரம் செய்வதற்காக கோயிலுக்குக் கொடுக்கிறார்கள்.

இவர்கள்; இப்படிக் கொடுப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் கொடுத்தது மட்டுமல்ல ஒவ்வொருமுறையும் சுவாமிக்குபோட்டு அலங்காரம் செய்ய வற்புறுத்துகிறார்கள்.

கோவிலில் நகைகள் சேரும்போது திருட்டுப் போவதற்கும் கோவில் நிர்வாகிகளே பேராசைப்பட்டு கள்ளக்கணக்கு எழுதுவதற்கும் இந்த விலையுயர்ந்த நகைகள் ஏதுவாகின்றன.

இப்படி நகைகள் ஒரு கோவிலில் இருப்புதையே கருத்தாகக் கொண்டு நாஸ்த்திகர்களும் கூட கோவில் விவகாரங்களில் தலையிட ஆரம்பிக்கிறார்கள்.
கோவிலுக்கு காணிக்கையாக வரும் பொருட்கள் கோவில் பக்தர்கள் நன்மைக்காகவும் இந்து சமயத்தின் வளர்ச்சிக்காகவும் மட்டுமே பயன்படவேண்டும்.

மாறாக பெரும் செல்வத்தை நம் கோவிலில் சேர்த்து வைத்தால் முகமதியர் கொள்ளையடித்ததைப் போல இப்போது நாஸ்த்திகர்கள் கொள்ளையடிப்பதிலேயே தான் போய்முடியும்.


இனிமேல்

நாம் கோவிலுக்குப் பணம் சேர்ப்பதைவிட பக்தர்களையும் உண்மையான இந்துக்களையும் சேர்க்க வேண்டியது மிகமிக அவசியம்.

சிறிய கோவிலாக இருப்பினும் அங்கே வழிபாடு செய்யும் பக்தர்கள் சேர்ந்திருந்து பிரார்த்தனை செய்வதற்கும் சமயக் கருத்துக்களைக்குறித்து உபன்னியாசங்கள் கேட்பதற்கும் சமயவகுப்பு திருவிளக்கு வழிபாடு செய்வதற்குமாக ஒரு மண்டபம் கண்டிப்பாகத்தேவை. அதை விட்டுவிட்டு ஆடம்பரமாக கூட கோபுரங்களைக் கட்டி ஆனால் ஆட்கள் உட்கார இடமில்லாமல் கோவில் அமைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

வழிபாடு செய்யும்போது பூஜாரி சொல்லும் மந்திரங்களைக் கூறவேண்டும். இதற்காக ஆலய நிர்வாகிகள் ஊர்மக்கள் சமஸ்கிருத, தமிழ் மந்திரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளைத் தெளிவாகக் கற்க ஆவன செய்யவேண்டும். அத்துடன் வாரம் ஒரு நாள் சமய வகுப்பு வாரம் ஒரு நாள் சத்சங்கம் மாதம் ஒரு நாள் திருவிளக்கு வழிபாடு ஆகியவை நடைபெற ஏற்பாடு செய்யவேண்டியது ஆலய நிர்வாகிகளின் தலையாய கடமையாகும்.

விழாக்கள் நடத்தும்பொழுது ஊருக்குஊர் யார் அதிகமாக ஆடம்பரச் செலவு செய்வது என போட்டிபோட்டு மக்களின் பணம் விரயமாக்குவது கூடவேகூடாது. இது மகாபாவம் விழாக்களில் ஆன்மீகத்தை ஊட்டாத வளர்க்காத எந்த நிகழ்ச்சியையும் நடத்தலாகாது. அவ்வாறு நடத்தினால் நிர்வாகிகளும் ஊர்மக்களும் தெய்வ கோபத்திற்கு ஆளாகி இன்னல் படவேண்டிவரும்.

ஆலயங்களில் அதனைச் சுற்றியிருக்கும் அனைத்து மக்களின் முழுவிவரப் பதிவேடு பேணப்படவேண்டும். பிறப்பு திருமணம் மரணம் இவற்றிற்கானத் தனித்தனி பதிவேடு பேணப்படவேண்டும்.

மேலும் ஊரில் யாருக்கேனும் நல்லது கெட்டது நடந்தால் அங்கு சென்று அவர்கள் வளமுடனும் அமைதியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ பிரார்த்திப்பதற்கு ஒரு பிரார்த்தனைக்குழு ஏற்பாடு செய்ய வேண்டும்.

பணம் இல்லை என்ற காரணத்தால் ஊரில் ஒருவரேனும்; கல்வி கற்கச் செல்லாமலோ திருமணம் ஆகாமலோ உணவின்றியோ இருக்கலாகாது. அவ்வாறு வசதியற்றவர்களுக்கு ஆலய விழாக்களுக்காக வசூலிக்கும் பணத்தை முழுவதும் விரயம் செய்யாமல் குறிப்பிட்ட சதவீதம் நிரந்தர சேமிப்பில் வைத்து அதன் வட்டிமூலம் கல்வி மருத்துவம் திருமணம் போன்ற உதவிகள் செய்ய முடியும்.

ஆலயங்களில் அந்தந்த ஊரைச்சார்ந்த பக்தியும் சிரத்iதையும் உடைய ஒருவரே பூஜை முறையைக் கற்று பூஜை செய்யவேண்டும். பூஜை செய்வதை ஒரு வருமானம் செய்யும் தொழில் எனவோ பரம்பரைத் தொழில் எனவோ ஆக்கக்; கூடாது.

கோவிலில் பூஜை என்பது வெறுமனே தீபாராதனை காண்பது என்பதாக இல்லாமல் தினசரி ஊரார் அனைவரும் மாலையில் கூடி பூஜையை கீழ்வருமாறு அமைத்;துக்கொள்ள வேண்டும்.

பஜனை
நன்மொழி வழங்கல்
ஒற்றுமை கீதம்
கூட்டுப் பிரார்த்தனை
தியானம்
நாபஜெபம்
தீபாராதனை கற்பூர ஆரதி
கூட்டாகத் துதிப் பாடல்கள் பாடுதல்
நமஸ்காரம் செய்தல்
பிரசாதம் பெறுதல்

இவ்வாறாக ஆலயங்கள் இருந்தால் நாம் சிறந்த இந்துவாக மாறி பாரதத்தை பாரின் குருவாகக் காண இயலும்.

(சுவாமி ஸ்ரீ மதுரானந்த மகராஜ் அவர்களால் தொகுத்து கன்னியாகுமரி வெள்ளிமலை ஸ்ரீ ஹிந்து தர்ம வித்யாபீடம் வெளியிட்ட இந்து சமயம் முதுநிலை என்ற நூலிலிருந்த தற்போதைய தலைவர் ஸ்ரீ சைதன்யானந்த மகராஜ் அவர்களுடைய அனுமதியுடன் பிரசுரிக்கப்படுகிறது)

No comments: