அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, August 13, 2008

நான்முகன் உபதேசம்

தேவர்களுக்கு அருளியது - தமனம் (கட்டுப்பாடு)

சுகபோகங்கள் நிறைந்த சுவர்க்கலோகத்தில் அளவோடு சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டு அவைகளுக்கு அடிமையாகாமல் வாழ்வீர்களாக!

மனிதர்களுக்கு அருளியது - தானம்

செல்வம் சேர்ப்பதில் அதிகமான மோகம் கொண்ட நீவிர் சம்பாதிக்கும் பொருள்களில் குறிப்பிட்டளவு பங்கை இல்லாதாருக்கும் இயலாதவர்க்கும் தானமாக அளியுங்கள்!

அசுரர்களுக்கு அருளியது – தயா (இரக்கம்)

கோபங்ககளும் கொலைவெறியும் ஆதிக்கமோகமும் கொண்ட நீவிர் தயா எனும் நல்வழிகாட்டும் இரக்க குணத்தை திடமாகக் கடைப்பிடித்து வாருங்கள்!

தேவர்களும் மனிதர்களும் அசுரர்களும் பிரம்மதேவரின் உபதேசத்தைக் கடைப்பிடிக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியும் புகழ்ச்சியும் பெற்றார்கள். பெரும்பாலும் இவர்கள் பிரம்ம வாக்கை மீறிச் சென்று சீர்குலைவு கண்ட நிகழ்ச்சிகள் தான் அதிகம். முறையும் முறைகேடும் கலந்த வாழ்க்கை தான் இன்றும் மனிதர்களையும் மற்றவர்களையும் அல்லற்படுத்திக் கொண்டு இருக்கின்றன.

No comments: