அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, March 13, 2010

திருகோணமலை மாவட்டத் தேர்தல் ஒரு ஆய்வு!


திருகோணமலை மாவட்டம். ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் 4

கடந்த 10 வருடங்களில் நடைபெற்ற தேர்தல்களில் கிடைத்த வாக்குகளும் பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பு வாக்கு விபரங்களும் -

2000இல்

Peoples Alliance ..... 53,860 - 3 Seats
Abdul Majeed M.N. ....18,173
Mohamed Sharief Thamfic ....15,588
Appuhamilage Don Somadasa Gunawardana Munasinghe Kariyawasam.... 15,392

United National Party ..... 46,700 - 1 seat
Abdullah Mohamed Maharoof Mohamed ....21,348

Tamil United Liberation Front .....14,090 ஆசனம் கிடைக்கவில்லை

2001இல்

United National Party ..... 62,930 - 2 seats
Abdullah Mohamed Maharoof Mohamed ....25,264
Kabeeb Mohamed Thoufeek ....24,847

Tamil United Liberation Front .....56,121 - 1 seat

Irajavarothayam Sampanthan ....40,110

Peoples Alliance ..... 32997 - 1 seat
Appuhamilage Don Somadasa Gunawardana Munasinghe Kariyawasam ....14,938

2004இல்

ILLANKAI TAMIL ARASU KACHCHI .....68,955 - 2 seats
Irajawarodayam Sampanthan ....47,735
Kadirgamathambi Thurairetnasingam .... 34,773

SRI LANKA MUSLIM CONGRESS ..... 65,187 - 1 seat
Abdullah Mohamed Maharoof Mohamed ....26,948

UNITED PEOPLE'S FREEDOM ALLIANCE .....31,053 - 1 seat
N.W.M. Jayantha Wijesekara .... 19,983

திருமலை மாவட்டத்தில் 2000இல் தனித்துப் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி 14,090 வாக்குகளைப் பெற்றதுடன் ஆசனமெதையும் பெறாதிருந்தது. அடுத்த வருடத்தில் நடந்த தேர்தலில் 4 கட்சிகள் இணைந்து போட்டியிட்ட போது தமிழர் விடுதலைக் கூட்டணி 1 ஆசனத்தையும் கடந்த 2004 தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 2 ஆசனங்களையும் பெற்றது.

கிடைத்துவந்த சிங்களப் பிரதிநிதித்துவத்தில் மாற்றமில்லாவிட்டாலும் தமிழ்ப்பேசும் மக்கள் மத்தியில் பிளவு இருப்பதனால் அது மாற்றமடைந்து வந்திருக்கிறது. தந்தை செல்வா தமிழ்ப் பேசும் மக்கள் என அனைவரையும் சேர்த்தே குறிப்பிடுவார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சியும் - அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்திருந்து பத்திரிகை செய்தி வெளியிட்ட சில நிகழ்வுகளைப் பார்த்து ஏதோ இவர்கள் ஒன்றுபடப் போகிறார்கள் என மக்கள் முட்டாளானதுதான் மிச்சம். கூட்டமைப்பு இம்முறை தனது ஒரு பிரதிநிதித்துவத்தையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் 2000ஆம் ஆண்டு நிலை ஏற்பட வழிசமைக்கும். ஓரிரு ஆயிரங்களால் வித்தியாசப் படுவதால் பிரதிநிதித்துவத்தை இந்த விகிதாசாரத் தேர்தல் முறைமூலம் பெற்றுக் கொள்ளலாம் 15,000 அல்லது அதற்கு அண்ணளவான வாக்கு வித்தியாசம் ஏற்பட்டால் விழும் வாக்குகளினடிப்படையில் கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்புண்டு.

1989இல் ஈரோஸின் சுயேட்சைக் குழுவும் திருமலையில் 25,239 வாக்ககளைப்பெற்று 2ஆசனங்களைக் கைப்பற்றியது. இதில் எஸ். இரட்ணராஜா 784 விருப்பு வாக்குகளையும் கோணமலை மாதவரஜா 575 வாக்குகளையும் பெற்று பாராளுமன்றுக்குத் தெரிவானார்கள். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 22,966 வாக்குகளையும்(Appuhamilage Don Somadasa Gunawardana Munasinghe Kariyawasam 11,260) ஐக்கிய தேசியக் கட்சி 22,450 வாக்குகளையும்(Mohammed Ehuttar Hadjiiar Maharoof 10,000) பெற்று தலா ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றன.

No comments: