அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, March 31, 2010

தந்தை செல்வாவுடன் நாடாளுமன்றிலிருந்த ஆனந்தசங்கரி அவர்களே சரியான தெரிவு!

அன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வா அவர்களும் தற்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி அவர்களும் 1970ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றிபெற்று ஒரே காலத்தில் நாடாளுமன்றில் இருந்தவர்கள்.

2010தேர்தலில் போட்டியிடும் தமிழர்களில் தந்தை செல்வாவுடன் நாடாளுமன்றில் ஒன்றாயிருந்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர் ஒருவரே! தமிழரசுக் கட்சியின் இன்னொருவரான பண்டிதர். கா.பொ. இரத்தினம் அவர்கள் இப்போதிருக்கும் மற்றைய உறுப்பினராவார்.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து தெரிவான 3 உறுப்பினர்களில் இருவர் அரசுடன் இணைய தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் தோற்ற நிலையில் தமிழ்க் காங்கிரஸின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினராக - தமிழர் கூட்டணியிலும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் தொடர்ந்தவரும் இவர் ஒருவரே!

1965இல் கிளிநொச்சி - கரைச்சி கிராம சபையின் தலைவராக இருந்து பின் 1968இல் கிளிநொச்சி நகர சபைத் தலைவராகி - கிளிநொச்சித் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக 1970இல் இருந்து 1983 வரை தொடர்ந்து இருந்த பெருமைக்குரியவர் - ஆனந்தசங்கரி அவர்கள்.

1989இல் யாழ்ப்பாணத்திலும் 2004இல் வன்னியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்த இவர் 2000 2001களில் நடைபெற்ற தேர்தல்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவராவார்.

2001 தேர்தலில் புலிகளின் ஆதரவாளர்களால் திட்டமிட்டே தோற்கடிக்கப்பட்டார்.

இவருக்கு 2006இல் ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ அமைப்பு கௌரவ விருது வழங்கியமை - இவருடைய துணிச்சலுக்கும் நீதிக்குமான ஒரு சான்றாகும். போரின்போது எவருமே மக்களுக்காக (சிலர் ஏகப்பிரதிநிதிகளுக்காக குரலெழுப்பியது வேறு)குரலெழுப்பாத நிலையில் அரசுடைய முகமூடிகளைக் கிளித்தெறிந்து உண்மை நிலைகளை அறியத் தந்தவர்.

ஆசிரியராக - சட்டத்தரணியாக இருந்த இவர் கிராம சபையிலிருந்து ஆரம்பித்து கிளிநொச்சியை தனி மாவட்டமாக்கிய பெருமைக்குரியவராவார்!

ஒரு மாவட்டத்தை உருவாக்கியவர் - அந்த மாவட்டத்திற்கே அழிவு என்ற போதும் - தனது மக்கள் கொடுரமான அவலங்களைச் சந்திக்கும்போது - மௌனம் சாதிக்காமல் தன்னாலியன்றதைச் செய்ததை - மறந்துவிடாமல், அவரது அனுபவம் - ஆற்றல் - துணிவு இவற்றை கவனித்து இம்முறை நடைபெற இருக்கும் தேர்தலில் யாழ் மாவட்டத்திலும் வன்னி மற்றும் மட்டக்களப்பு, கொழும்பு மாவட்டங்களிலும் ஆனந்தசங்கரி அவர்கள் தலைமையில் இயங்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆதரிப்போமாக!

No comments: