அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, March 11, 2010

அமரர்கள் ஜீஜீயும் தந்தை செல்வாவும்!


பொன்னம்பலம், 1901 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் கணபதி காங்கேசர், யாழ்ப்பாணத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள அல்வாய் என்னும் ஊரைச் சேர்ந்தவர், தபால் அதிபராகப் பணியாற்றினார். தாயார் மானிப்பாய்க்கு அண்மையிலுள்ள நவாலியைச் சேர்ந்தவர். பொன்னம்பலம், யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும், கொழும்பு சென் ஜோசப் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்னர் உயர் கல்விக்காகக் கேம்பிரிட்ஜ் சென்று இயற்கை அறிவியல் துறையிலும் சட்டத்துறையிலும் பட்டம் பெற்றார். இலங்கை திரும்பிய அவர் கொழும்பில் வழக்கறிஞராகத் தொழில் புரிந்தார். நல்ல வாதத் திறமை கொண்ட பொன்னம்பலம் சிறந்த குற்றவியல் வழக்கறிஞராகப் புகழ் பெற்றார். 1948 ஆம் ஆண்டில் அரச வழக்கறிஞர் (King’s Counsel) என்னும் தகுதியைப் பெற்றுக்கொண்டார்.

இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர். இவரது மகன், குமார் என்று அழைக்கப்பட்ட காசிநாதர் காங்கேசர் பொன்னம்பலம், இலங்கைத் தமிழர் அரசியலில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர். இனவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1931 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் முதலாவது அரசாங்க சபைக்கான தேர்தலில் மன்னார்-முல்லைத்தீவுத் தொகுதியில் பொன்னம்பலம் போட்டியிட்டாராயினும் வெற்றிபெற முடியவில்லை. ஆயினும் இது இவரின் அரசியல் வாழ்வின் தொடக்கமாக அமைந்தது. 1934 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் பருத்தித்துறைத் தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம், வெற்றி பெற்று அரசாங்க சபை உறுப்பினர் ஆனார். 1936 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்ற இவர் 1947 ஆம் ஆண்டுவரை அரசாங்க சபை உறுப்பினராகத் தொடர்ந்தார்.

1944, ஆகஸ்ட் 29 இல் இலங்கையில் தமிழர் நலன்களைப் பேணும் நோக்கில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்னும் அரசியல் கட்சியை இவர் தொடக்கினார். இக் கால கட்டத்தில் இலங்கையில் அரசியல் சீர்திருத்தங்களுக்காக பிரித்தானிய அரசினால் ஏற்படுத்தப்பட்ட சோல்பரி ஆணைக்குழு முன் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக சமபல பிரதிநிதித்துவ முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என வாதிட்டார். இதன் மூலம் பொதுவாக இலங்கை அரசியலிலும், சிறப்பாக இலங்கைத் தமிழர் அரசியலிலும் பெரும் செல்வாக்குப் பெற்றார். அக்காலத்தில் ஐம்பதுக்கு ஐம்பது என்று பரவலாக அறியப்பட்ட இச் சமபல பிரதிநிதித்துவக் கொள்கையை அடிப்படையில் 1947 இல் இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்துக்காக நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழ்க் காங்கிரஸ் பெரு வெற்றி பெற்றது. இத் தேர்தலில் நல்ல அரசியல் செல்வாக்குக் கொண்டிருந்த அருணாசலம் மகாதேவாவை எதிர்த்து யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம் பெருமளவு வாக்குகளால் வெற்றி பெற்றார்.

1948 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியால் அமைக்கப்பட்ட முதலாவது அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டதும், மலையகத் தமிழரின் பிரஜா உரிமை பற்றிய பிரச்சினைகளில் பொன்னம்பலத்தின் அணுகு முறைகளையும் ஏற்றுக்கொள்ளாத சில தலைவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறினர். இதனால் கட்சி பிளவு பட்டது. எனினும் பொன்னம்பலம் ஐக்கிய தேசியக் கட்சி அரசில் தொழில் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். சுமார் ஐந்தாண்டு காலம் அமைச்சராகப் பதவியில் இருந்த இவர், பல பாரிய தொழிற்சாலைகளைத் தமிழர் பகுதிகளில் நிறுவினார். வடக்கில், காங்கேசன்துறையில் நிறுவப்பட்ட சீமெந்துத் தொழிற்சாலையும், வன்னிப் பகுதிக்கு அண்மையில் பரந்தன் என்னுமிடத்தில் நிறுவப்பட்ட இரசாயனத் தொழிற்சாலையும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்கு அண்மையில் வாழைச்சேனையில் ஏற்படுத்தப்பட்ட காகித ஆலையும் இவற்றுள் முக்கியமானவை.

தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்த செல்வநாயகம், வன்னியசிங்கம், நாகநாதன் முதலிய தலைவர்கள் தமிழரசுக் கட்சி என அழைக்கப்பட்ட கூட்டாசிக் கட்சியை (Federal Party) உருவாக்கினர். தமிழ்க் காங்கிரசைவிடக் கூடிய தமிழ்த் தேசியவாதக் கட்சியாக அடையாளம் காணப்பட்ட இக் கட்சியின் செல்வாக்கு வளர்ந்தபோது, காங்கிரசின் செல்வாக்குக் குறையத் தொடங்கியது.

1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ஈ. எம். வி. நாகநாதன், பொன்னம்பலத்தை எதிர்த்து யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்டார். இத் தேர்தலில் பொன்னம்பலம் வெற்றி பெற்றார் ஆயினும், வாக்கு வித்தியாசம் குறைவடைந்ததுடன், நாடாளுமன்றத்தில் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையும் குறைந்தது. 1956 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் காங்கிரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. இத் தேர்தலில் இக் கட்சியின் சார்பில் பொன்னம்பலம் மட்டுமே மிகவும் குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.

1960 ஆம் ஆண்டில் இரண்டு தடவைகள் பொதுத்தேர்தல் நடைபெற்றது. மீண்டும் யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம் இரண்டிலும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரான அல்பிரட் துரையப்பாவிடம் தோற்றார்.

1965 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத் தேர்தலில் இவருடன் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்னும் இருவர் (உடுப்பிட்டி மு. சிவசிதம்பரம், வவுனியா தா. சிவசிதம்பரம்) வெற்றி பெற்றனர்.

1970 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலிலும் பொன்னம்பலம் யாழ்ப்பாணத் தொகுதியிலேயே போட்டியிட்டார். இத்தடவை இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் மாவட்ட நீதவான் ஆகிய சி. எக்ஸ். மார்ட்டின் என்பவரிடம் தோல்வியடைந்தார். இத் தேர்தலில் மூன்றாம் இடமே இவருக்குக் கிடைத்தது. இதுவே பொன்னம்பலம் போட்டியிட்ட இறுதித் தேர்தலாகவும் அமைந்தது.

1970 ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின்னர் இலங்கைத் தமிழர் அரசியலில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. 1970 இல் பதவிக்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசு பல தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் தமிழ் இளைஞர் மத்தியில் தீவிரவாதம் முளைவிடத் தொடங்கியது. தமிழர் மிதவாதக் கட்சிகளின் தலைவர்கள் இனியும் பிரிந்து நின்று எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்தனர். தமிழரசு, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், மலையகத் தமிழர்களின் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசையும் சேர்த்துக்கொண்டு தமிழர் கூட்டணி என்னும் புதிய அமைப்பை உருவாக்கினர். இதன் தலைவர்களாக, எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், எஸ். தொண்டமான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இதன் மூலம் அரசியலில் இருந்து ஓரளவுக்கு ஒதுங்கி இருந்த பொன்னம்பலம் மீண்டும் அரசியலுக்கு வந்தார். எனினும் தீவிர அரசியல் இவர் நேரடியாக இறங்கவில்லை.

தமிழர் கூட்டணியினர் தமிழீழம் என்னும் தனி நாட்டை உருவாக்குவதற்கான கோரிக்கையை முன்வைத்துத் தீர்மானம் நிறைவேற்றினர். அத்தீர்மானத்தை அச்சிட்டு மக்களுக்கு நேரடியாக வழங்கிய அ.அமிர்தலிங்கம், வி. என: நவரத்தினம், கா.பொ. இரத்தினம், கே. துரைரட்ணம் முதலிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு ட்ரையல் அட் பார் எனப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணை நடத்த ஏற்பாடாகியது. இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மிகவும் கவனிக்கப்பட்ட ஒரு வழக்காக இது விளங்கியதுடன், தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையைக் காட்டும் ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது எனலாம். இவ்வழக்கை நடத்துவதற்காகச் செல்வநாயகம் தலைமையில் அமைக்கப்பட்ட 61 வழக்கறிஞர் குழுவில் ஜீ.ஜீ. பொன்னம்பலம் பங்குபற்றி வாதாடினார். இதில் பொன்னம்பலத்தின் வாதத்திறமையினால் கூட்டணித் தலைவர்கள் விடுதலையாயினர். இவ் வழக்கின் மூலம் தமிழர் மத்தியில் பொன்னம்பலத்தின் செல்வாக்கு மீண்டும் உயர்ந்தது எனலாம்.

இவ் வழக்கில் ஏற்பட்ட புகழ் காரணமாகத் தமிழ்நாட்டில் மு. கருணாநிதி மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கொன்றிலும் கருணாநிதிக்காகப் பொன்னம்பலம் வாதாடினார். எனினும் வழக்கு முடியுமுன்னரே மலேசியாவில் அவர் காலமானார்.

அவரது உடல் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுக் கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபின்னர் யாழ்ப்பாணத்தில் அவரது சொந்த ஊரான அல்வாயில் மக்கள் திரளின் மத்தியில் எரியூட்டப்பட்டது.

Chelvanayakam was born in Ipoh, Malaysia(31.03.1898), but returned to Sri Lanka (then called Ceylon) at the age of four. He studied at Union College, Tellippalai, and St. Thomas' College. At age 19, he had a bachelor's degree, and by 25, was called to the bar. He married Emily Grace Barr Kumuarakulasinghe two years later.

Chelvanayakam became active in the All Ceylon Tamil Congress during the drive for independence, becoming the party's deputy leader. He was elected to Parliament in the 1947 elections.

The ACTC was torn between Chelvanayakam and G.G. Ponnambalam, who pushed for greater cooperation with the United National Party government. Chelvanayakam broke with Ponnambalam in protest over the latter's support for the denial of citizenship to the estate Tamils in 1949. He went on to found a new, more aggressive party, the Federal Party.

In the 1956 election, the Federal Party emerged as the leading party in the Tamil regions, but the new prime minister, Solomon Bandaranaike, pushed through the Sinhala Only Act, which met with stiff opposition from the Tamils.

Chelvanayakam led a satyagraha protest against the new law. The campaign succeeded at first in swaying the government, which negotiated the Bandaranaike-Chelvanayakam Pact which agreed to provide government services in Tamil and devolve powers to a set of provincial councils. Bandaranaike abandoned the pact after stiff opposition from Buddhist monks.

After his fruitless experience dealing with the Sri Lanka Freedom Party governments of 1956-65, Chelvanayakam turned to the UNP. After that party's victory in the 1965 election, the Federal Party joined the government of Dudley Senanayake. He signed the Senanayake-Chelvanayakam Pact which also provided for Tamil services and district councils.

Senanayake's regime failed to implement the Pact and as a result, Chelvanayakam and the FP left the government in 1968.

By the 1970s, Chelvanayakam had grown bitter over his failure to win any meaningful concessions from the Sinhalese, and became sympathetic to the cause of Tamil separatism. The FP and other parties merged into the Tamil United Liberation Front towards that end, with Chelvanayakam as their leader.

His health was increasingly poor; he had suffered from Parkinson's disease and growing deafness since the 1950s. In 1961, Chelva underwent surgery in Edinburgh to relieve the stress from Parkinson disease at the hands of a neurosurgeon, Francis John Gillingham and the operation “proved successful.” Despite the success of this operation, he died in 1977 at his home and was buried in Jaffna.

Chelvanayakam was a beloved figure to Sri Lanka's Tamils, to whom he was known as "Thanthai Chelva" or "Father Chelva". He was called as Eezha Thahthai Selva in Tamil Nadu .He was sometimes compared to Mahatma Gandhi due to his reliance on nonviolence and, even at the end of his life, his commitment to use only peaceful means to achieve his political ends. Chelvanayakam's political biography was published in 1994 by his son-in-law and political science professor A.Jeyaratnam Wilson.


Jaffna
1947

G. G. Ponnambalam Bicycle 14,324

A. Mahadeva Elephant 5,224

1952

Ponnambalam, G.G. Umbrella 12,726

Naganathan, E.M.V. Hand 8,317

1956

G. G. Ponnambalam Bicycle 8,914

E.M.V. Naganathan House 7,173

M. Karthigasan Star 3,239

A. Visuvanathan Key 2,703

1960 March

A.T. Durayappah Sun 6,201

G.G. Ponnambalam Bicycle 5,312

S. Kathiravelupillai House 5,101

Arulambalam Visuvanathan Key 767

1960 July

A.T. Durayappah Bicycle 6,313

G.G. Ponnambalam Eye 6,015

S. Kathiravelupillai House 5,644

1965

G.G. Ponnambalam Bicycle 9,350

C.X. Martyn House 6,800

Alfred T. Duryappah Pair of Scales 5,918

1970

C.X. Martyn House 8,848

A.T. Durayappah Umbrella 8,792

G.G. Ponnambalam Bicycle 7,222


kankesanturai
1947

S.J.V. Chelvanayakam Key 12,126

P. Nagalingam Hand 5,160

S. Nateson Pair of Scales 4,605

1952

Natesan, Subbaiya Key 15,337

Chelvanayakam, S.J.V. Bicycle 11,571

1956

S.J.V. Chelvanayakam House 14,855

S. Natesan Umbrella 8,188

V. Ponnampalam Star 4,313

1960 March

S.J.V. Chelvanayakam House 13,545

V. Karalasingham Key 5,042

R.N. Sivapirakasam Bicycle 1,448

1960 July

S.J.V. Chelvanayakam House 15,668

R.N. Sivaprkasam Pair of Spectacles 2,009

1965

S.J.V. Chelvanayakam House 14,735

S. Sri Bhaskaran Bicycle 6,611

V. Karalasingham Lamp 2,257

K. Vaikunthavasan Star 958

V. Seenivasagam Umbrella 741

1970

S.J.V. Chelvanayakam House 13,520

V. Ponnampalam Star 8,164

C. Suntharalingam Cockerel 5,788

T. Thirunavakkarasu Bicycle 3,051

2 comments:

Kandumany Veluppillai Rudra said...

சரித்திரம்,திரும்பிப் பார்ப்பதில் ஒரு சுகம்.
நல்ல பதிவு.எதிர் காலத்தில்,இவைகள் ஆவணமாகப் பார்க்கலாம்

ஜோதிஜி said...

சரித்திரம் போற்றப்பட வேண்டியது. ஆனால் ஐக்கிய தேசிய கட்சியில் இவர் அமைச்சர் பதவி பெற்றது எப்படி? எதனால் என்பதை விட்டு விட்டீர்களே?
இவர் துவங்கி வைத்தது? இன்று மொத்த மக்களுக்கும் இவர் உருவாக்கியது தானே முதல் காரணம்? ஒத்துக் கொள்வீர்களா?

நான் அறிய வேண்டிய தகவல்கள் நிறைய பெற்றுக்கொண்டேன். நன்றி.