அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, March 13, 2010

நிராகரிக்கப்படும் வாக்குகள் ........ சிந்திக்கவேண்டியது அவசியம்!

பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் - தேர்தல் தொகுதி முறையில் 1970இல் மிகக்குறைந்தளவு நிராகரிக்கப்பட்ட வாக்குகள் கிளிசொச்சியில்தான் போடப்பட்டது(60). 1977இலும் அங்கே தான் குறைவானது மீண்டும் பதிவாகியது(56).

விகிதாசாரத் தேர்தல் முறையின்கீழ் 1989இல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 25,203
வன்னி மாவட்டத்தில் 4,462
மட்டக்களப்பு மாவட்டத்தில் 13,923
திகாமடுல்ல மாவட்டத்தில் 10,727
திருகோணமலை மாவட்டத்தில் 4,878
நாடு முழுவதும் 3,65,563

1994இல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 358
வன்னி மாவட்டத்தில் 3,009
மட்டக்களப்பு மாவட்டத்தில் 15,531
திகாமடுல்ல மாவட்டத்தில் 12,736
திருகோணமலை மாவட்டத்தில் 6,682
நாடு முழுவதும் 400,389

2000இல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 13,664
வன்னி மாவட்டத்தில் 6,604
மட்டக்களப்பு மாவட்டத்தில் 11,205
திகாமடுல்ல மாவட்டத்தில் 16,521
திருகோணமலை மாவட்டத்தில் 8,642
நாடு முழுவதும் 4,81,155

2001இல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 10,681
வன்னி மாவட்டத்தில் 7,850
மட்டக்களப்பு மாவட்டத்தில் 13,275
திகாமடுல்ல மாவட்டத்தில் 17,225
திருகோணமலை மாவட்டத்தில் 8,429
நாடு முழுவதும் 4,93,944

2004இல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 21,233
வன்னி மாவட்டத்தில் 10,626
மட்டக்களப்பு மாவட்டத்தில் 12,648
திகாமடுல்ல மாவட்டத்தில் 18,264
திருகோணமலை மாவட்டத்தில் 8,863
நாடு முழுவதும் 5,34,948

ஜனாதிபதித் தேர்தலில்

1982இல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 10,610
வன்னி மாவட்டத்தில் 2,447
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,879
திகாமடுல்ல மாவட்டத்தில் 2,101
திருகோணமலை மாவட்டத்தில் 1,795
நாடு முழுவதும் 80,470

1988இல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 8,517
வன்னி மாவட்டத்தில் 708
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5,163
திகாமடுல்ல மாவட்டத்தில் 3,802
திருகோணமலை மாவட்டத்தில் 1,326
நாடு முழுவதும் 91,445

1994இல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 141
வன்னி மாவட்டத்தில் 681
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,664
திகாமடுல்ல மாவட்டத்தில் 3,621
திருகோணமலை மாவட்டத்தில் 1,726
நாடு முழுவதும் 1,51,706

1999இல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 5,981
வன்னி மாவட்டத்தில் 1,490
மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,747
திகாமடுல்ல மாவட்டத்தில் 4,549
திருகோணமலை மாவட்டத்தில் 2,642
நாடு முழுவதும் 1,99,536

2005இல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 656
வன்னி மாவட்டத்தில் 1,398
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,778
திகாமடுல்ல மாவட்டத்தில் 2,941
திருகோணமலை மாவட்டத்தில் 2,094
நாடு முழுவதும் 1,09,739

2010இல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 6,763
வன்னி மாவட்டத்தில் 2,428
மட்டக்களப்பு மாவட்டத்தில் 4,396
திகாமடுல்ல மாவட்டத்தில் 2,912
திருகோணமலை மாவட்டத்தில் 2,432
நாடு முழுவதும் 1,01,838

பாராளுமன்றத் தேர்தலில்மட்டுமே மக்களுடைய எதிர்ப்பு வலுவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணங்களை கண்டறிதல் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு இன்றியமையாதது. அதிகம் படித்த - கல்வியறிவுடைய யாழ் மாவட்டம் ஏன் தேர்தல்களில் அதுவும் பாராளுமன்றத் தேர்தலில் நிராகரிக்கும் பங்கை அதிகம் வகிக்கின்றார்கள் என ஆழமாகச் சிந்திக்க வேண்டம். தேர்தலில் பங்குபற்றாமல் இருப்பது வேறு - தம் வாக்குகளை அழிப்பது வேறு!

மக்களிடையே தமது பிரதிநிதிகள் மீதான அதிருப்தியே இதற்கு காரணமாகும். ஏனெனில் இங்கு தேர்தலில் வாக்களிக்கும் முறை தெரியாது என எவரும் குற்றம்சாட்ட முடியாது. ஜனாதிபதித் தேர்தலில் குறைந்தளவு சிராகரிக்கப்பட்ட வாக்குகள் பாராளுமன்றத் தேர்தலில் பல மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத் தக்கது. சம்பந்தப்பட்டவர்கள் இந்த நிலையை சரிபார்க்க முன்வரவேண்டும்.

இதில் இன்னுமொரு வேடிக்கை என்னவெனில் 2000இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு மாவட்டத்திலும் உறுப்பினரைப் பெற முடியாதளவு தோல்வியடைந்த சிகல உருமய கட்சி நாடு முழுவதிலும் போட்டியிட்டு 1,27,863 வாக்குகளைப் பெற்று தேசியப் பட்டியலில் ஒரு ஆசனத்தைப் பெறமுடிந்ததே.

1982 இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட குமார் பொன்னம்பலம் பெற்ற வாக்குகள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 87,263
வன்னி மாவட்டத்தில் 11,521
மட்டக்களப்பு மாவட்டத்தில் 47,095
திகாமடுல்ல மாவட்டத்தில் 8,079
திருகோணமலை மாவட்டத்தில் 10,068
நாடு முழுவதும் 1,73,934

2010 இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சிவாஜிலிங்கம் பெற்ற வாக்குகள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,205
வன்னி மாவட்டத்தில் 549
மட்டக்களப்பு மாவட்டத்தில் 633
திகாமடுல்ல மாவட்டத்தில் 369
திருகோணமலை மாவட்டத்தில் 302
நாடு முழுவதும் 9,662

ஜனாதிபதித் தேர்தலில் 1982இல் குமார் பொன்னம்பலத்திற்கு கிடைத்த வாக்குகளில் 10சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளையே கடந்த 2010 தேர்தலில் சிவாஜிலிங்கமோ அல்லது தற்போது அவர்கள் கூட்டுச் சேர்ந்துள்ள கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவோ பெற்றிருந்தனர்.

No comments: