அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, March 30, 2010

தீர்க்கதரிசி தந்தை செல்வாவின் பிறந்தநாள் நாளை!

தமிழ்ச்சமூகம் அதிருப்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அதனால்தான் உணர்ச்சிமிக்க சில இளைஞர்கள் ஆயுதங்களைத் தூக்கி உள்ளனர்.
ஆயுதங்கள் அழிவுக் கருவிகள்.
ஆயுதத்தைத் தூக்கியவருக்கும் அது அழிவைக் கொடுக்கும்.


அகிம்சை அப்படியானதல்ல. போராடுபவர்களின் தார்மீக உரிமையை வளர்க்கும். போராடுவோரை ஆளவோ, அடக்கவோ முடியாத நிலைமையை ஆளவும் அடக்கவும் முயல்வோருக்கு ஏற்படுத்தும். அகிம்சைப் பாதையில்தான் எம் போராட்டம் அமையும். அதிலிருந்து சற்றும் விலகமாட்டோம்.

இறுதியாக தந்தையவர்கள் தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறிய தீர்க்கதரிசன வார்த்தைகளை நாம் நிதானமாக சிந்திப்பது அவசியம்.

வாழும் உரிமைக்கான போராட்டத்தில் இன்றைய நிலையில் தந்தையின் நாமத்தைச் சொல்வதற்கோ அல்லது அவரது தமிழரசுக் கட்சியையும் அதன் சின்னத்தையும் உபயோகப் படுத்துவதற்கோ இன்றுள்ள தமிழரசுக் கட்சியினருக்கு ஒரு யோக்கியதையும் இல்லை!

கடந்த 2004 பொதுத் தேர்தலில் தலைவர் ஆனந்தசங்கரியவர்கள் - தமிழர் விடுதலைக் கூட்டணியை பிரிந்து சென்றவர்கள் பயன்படுத்த முடியாதென நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்த காரணத்தினால் நியாயமற்ற முறையில் ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்த தமிழரசுக் கட்சியை பயன்படுத்தினார்கள். அதனால் ஏற்பட்ட பாரதூரமான விளைவுகளை யோசிக்காமல் மீண்டும் இம்முறை தமக்குள் பிளவுண்டு அநியாயத்திற்கு துணைபோகிறார்கள்.

நாளை நடைபெறவுள்ள அவரது பிறந்த தின நினைவில் இந்தப் பரிதாபத்துக்குரியவர்கள் என்ன நியாயங்களை முன்வைக்கப் போகிறார்களென பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே தமிழ் மக்களைச் சொல்லொணாத துயரத்தில் மாட்டிவிட்டிருக்கும் தமிழரசுக்கட்சியினர் தற்போது ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்தும் விதங்களில் தமது தேர்தல் பேச்சுக்களை வீசிவருகிறார்கள். நேரத்துக்கு ஒரு பேச்சுப் பேசும் பேச்சாளராக தற்போதைய தமிழரசுக் கட்சித் தலைவர் சம்பந்தன் பேசி வருவதும் யாவரும் அறிந்ததே!

தந்தையின் பெயரை உச்சரிப்பதற்கே தகுதியற்ற இவர்கள் பதவிகளுக்காக தந்தையின் பெயரை சொல்லியே மக்களை ஏமாற்ற முற்படுகிறார்கள்!

1 comment:

Unknown said...

உணர்ச்சிமிக்க சில இளைஞர்கள் ஆயுதங்களைத் தூக்கி உள்ளனர்.
ஆயுதங்கள் அழிவுக் கருவிகள்.
ஆயுதத்தைத் தூக்கியவருக்கும் அது அழிவைக் கொடுக்கும். அருமை நண்பா. பொங்கட்டும் உன் தீ. .... பொறுத்திருந்து பார்ப்போம்.mullaimukaam.blogspot.com