அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, September 29, 2008

இன்று 30.09.2008 செவ்வாய்க்கிழமை நவராத்திரி விரதாரம்பம்

வெண்டாமரைக்கன்றி நின்பதந்தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டாமரைக்குத் தகாதுகொலோ சகமேழுமளித்
துண்டானுறங்க வொழித்தான் பித்தாகவுண்டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே.


சகலாவல்லிமாலையில் குமரகுருபரசுவாமிகள்

எல்லாக் கலைகளுக்கும் தலைவி ஆக விளங்குகின்ற சரசுவதி அம்மையே! ஏழு உலகங்களையும் காத்து தன்னகத்தே வைத்துள்ள திருமால் பாற்கடலில் உறங்குகிறார். அவைகளை அழித்து ஒடுக்குகின்ற சிவனார் பித்தனாகத் திரிகிறார். ஆக்குங் கடவுளாகிய பிரம்மதேவர் உன்னை மனைவியாகப் பெற்று மகிழ்கிறார். உன் பெருமை என்னே! உன் திருப் பாதங்களைத் தாங்குகின்ற பேறு வெள்ளைத் தாமரைக்கு மட்டும் தானோ? எனது தூய மனமாகிய தாமரையில் குடியிருந்து அருள்புரியாயோ?

No comments: