அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, September 24, 2008

இசையாழி இசைக்கலைமாமணி மூளாய் அமரர் திருமதி.சாரதா பரஞ்சோதி

இசையுலகின் தாய் மடியில் அழியாத புகழ் படைத்த
இசையாழி இசைக்கலைமாமணி
மூளாய் அமரர் திருமதி.சாரதா பரஞ்சோதி
(ஆசிரியை சங்கானை சைவப்பிரகாச மகாவித்தியாலயம்,
முன்னாள் விரிவுரையாளர் இசைத்துறை யாழ்.பல்கலைக்கழகம்)

(வணக்கம் முகுந்தன் அண்ணா!
சாராதா அக்காவின் ஒராண்டு தினம் 25.09.2008 திகதி ஆகும் அதனை முன்னிட்டு றான் ஒர் கட்டுரை ஏழுதியுள்ளேன் அதனை தங்களின் கிருத்தியத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
"நன்றி"
பார்த்தீபன்)

யாழ்ப்பாண வலிகாமம் மேற்கு, மூளாய் என்னும் ஞானபூமியில் வதிரன்புலோ சித்தி விநாயகர், முகத்துக்குமாரசுவாமி ஆலயங்கள் வீற்றிருந்து அருள் பாலித்துவரும், அண்ணனும் தம்பியும் வாழ்ந்தால் இப்படித்தான் வாழவேண்டும் என்று வழிகாட்டிய ஆலயங்களுக்கு அழகு பொழியும் திருவீதிகள், சித்திரத் தேர் கொண்டு அமையப் பெற்ற தலம். ஆலயங்களுக்கு அயலில் குடியமைத்து தனது பாரம்பரிய கலையான சங்கீத கலையினை தேர்ச்சி பெற்று, தான் மட்டும் இசையில் வளராமல் தன்னோடு இணைந்தவர்களையும் அரவணைத்து இசையினை வளர்த்த மேதை திருமதி சாரதா பரஞ்சோதி அவர்களின் ஓராண்டு நினைவு தினம் இன்றாகும்.
வதிரன்புலோ வானின் வாசலிலே வந்துதித்தாய்
பதிகம் பாடியெமை பரவசத்தில் ஆழ்த்தி நின்றாய்
எதிலுமே எளிமையை வாழ்-நாளில் கடைப்பிடித்தாய்
அதிகம் படித்தும் நீ அமைதியாயத்தானிருந்தாய்
நதியாகி இசைக்கடலில் நீ நடந்து வந்தாய்
நதியாகி நம்மிடத்தில் நீ நிறைந்து நின்றாய்
துதிபாடி தும்பிக்கையான் துணையென்று வாழ்ந்தாய்
முதியோரின் ஆசியோடு முத்தமிழும் வளர்த்தாய்
சுதி கலைந்து போனதென்றோ வீணையாக
திசைமாறிப் பறந்தாய்
சங்கீதத்தோடு என்றும் சங்கமித்து நின்றவள்
எங்கெங்கும் இசை முழங்கி ஏற்றங்கள் தந்தவள்
ஆசிரிய தொழிலிலே அடி பணிந்து நின்றவள்
நேசத்தை நேசித்த மாணவர் தம் நெஞ்சத்தில் நின்றவள்
வதிரன்புலோவானை வாழ்த்தியே வாழ்ந்தவள்
கதிர்வேலன் தன்னையுமே இசைமழையால் நனைத்தவள்
உதிர்கின்ற வார்த்தைகளால் உலகத்தை ஆண்டவள்
வரமாக மூளாய்க்கு கிடைத்த ஒரு புத்திரி
பரஞ்சோதி மைந்தன் தன் பாசத்துப் பத்தினி
மதிகமென முத்துக்கள் இரண்டிணை வைத்தாய்
சோதிமைந்தன் தன் பாதியான சாரதாவே
ஆற்று வெள்ளம் என பாடும் ஆற்றலும் பெற்றவள்
நேற்று வரை இருந்தாய் நீ இன்று எங்கு சென்று விட்டாய்.
சங்கீதக் கடல் நீ மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆனாலும் உனது வதிரகானம் எம் காதுகளில் ஒலித்தவண்ணம் உள்ளது, நீ என்றும் எங்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய் உன் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகப் முத்துக்குமாரசாமி பாதார விந்தங்களில் சமர்ப்பிக்கின்றோம்.

No comments: