அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, September 30, 2008

இன்று நவராத்திரி ஆரம்பம்

சாக்தம் - தேவி வழிபாடு

ஒரே பரம்பொருளை பல்வேறு நாம ரூபங்களில் வழிபட்டு மகிழ்ந்தனர் நமது மூதாதையர்கள். கடவுளைத் தாயாக பெண் வடிவில் வழிபடுகின்ற கொள்கையை சாக்தம் என்றழைப்பர். பெண் தெய்வ வடிவங்களை விளக்கிக் கூறும் கொள்கைக்கு சாக்தேயம் என்று பெயர்.
வேதோபநிஷதங்களில் சிறிய அளவில் காணப்படும் குறிப்புகள், தேவி பாகவதம், தேவி புராணங்கள், ஆகமங்கள்(தந்திரங்கள்) முதலிய நூல்கள் வழியாக வளர்ச்சியடைந்தது. தக மகா வித்தையென்றும், சப்த மாத்ருக்கள்(ஏழம்மன்) என்றும் பல வடிவங்கள் தேவிக்கு உண்டு. அவைகளில் மகாசரஸ்வதி (பிராஹ்மி), மகாலஷ்மி (வைஷ்ணவி), மகாகாளி (பார்வதி) என்ற மூன்று வடிவங்கள் முக்கியமானவை.
மகாசரஸ்வதி ஞானத்திற்கும், மகாலஷ்மி செல்வத்திற்கும், மகாகாளி அல்லது துர்க்கா வீரத்திற்கும் அதிதேவதையாக இருக்கின்றனர். நவராத்திரி காலத்தில் இந்த சக்திகள் வழிபடப்படுகின்றனர்.
நமது நாட்டில் 108 சக்தி பீடங்கள் (தேவி கோவில்கள்) புகழ்பெற்றவைகள் ஆகும். இவற்றில் சில பாகிஸ்தானில் உள்ளன. காசி, உஜ்ஜயினி, காஞ்சி, மதுரை, கல்கத்தா (காளிக்கட்டம்), துவாரகை, மூகாம்பிகை முதலியன முக்கிய தேவி பீடங்கள் ஆகும். காசியில் விசாலாட்சி, உஜ்ஜயினியில் மகாகாளி, காஞ்சியில் காமாட்சி, மதுரையில் மீனாட்சி, கல்கத்தாவில் மகாகாளி, துவாரகையில் ருக்மணி முதலிய வடிவங்களில் தேவி வழிபடப்படுகிறாள். இவைபற்றிய விரிவுரைகள் பிரம்மாண்ட புராணம், உத்தர காண்டம் லலிதோபாக்கியானத்தில் சொல்லப்பெற்றுள்ளன.
தேவி மகாத்மியம் என்ற நூல் மார்க்கண்டேய புராணத்தில் அடங்கியது ஆகும். இது 700 பாடல்களுள்ள சிறந்த சாக்தேய நூலாகும். இதனைச் சண்டி என்று வங்காளிகள் கூறுவர். இதற்கு துர்க்கா சப்தசதீ என்ற பெயரும் உண்டு.
அசுரர்களை அழித்து தேவர்களுக்கு அருள்புரியும்பொருட்டு பரதேவதையாகிய சக்தி முதலில் மகாகாளியாகவும், பின்னர் மகாலஷ்மியாகவும், மகாசரஸ்வதியாகவும் தோன்றினாள். அவளது வரலாறு 13 அத்யாயங்களாக இந்நூலில் கூறப்பட்டுள்ளன. இதைப் பாராயணம் பண்ணுவோர் சகல துன்பங்களிலிருந்தும் விடுபடுவர் என்று பாரத மக்களால் போற்றப்படுகிறது. இந்நூல் மந்திர வடிவானது. நவராத்திரி காலத்தில் இவற்றைப் படித்தும் கேட்டும் நாம் எமது பிறவிப் பேற்றைப் பெற்றுய்வோமாக!!!

நம்பும் நம்மைக் காப்பதற்கு தேவி ஓடி வருகிறாள்

வருகிறாள் வருகிறாள் அன்னை சக்தி வருகிறாள்
வருகிறாள் வருகிறாள் ஆதி சக்தி வருகிறாள்

பாவம் எல்லாம் தீர்ப்பதற்கு பராசக்தி வருகிறாள்
பக்தர்களைக் காப்பதற்கு பத்ரகாளி வருகிறாள்

இன்னல் எல்லாம் தீர்ப்பதற்கு இச்சாசக்தி வருகிறாள்
கீர்த்தியோடு புகிழ் வழங்கிட கிரயாசக்தி வருகிறாள்

ஞானமழையைப் பொழிவதற்கு ஞானசக்தி வருகிறாள்
நம்பும் நம்மைக் காப்பதற்கு தேவி ஓடி வருகிறாள்

சமயபுரத்தில் வாழும் அம்மை சாந்தி வழங்க வருகிறாள்
சஞ்சலங்கள் தீர்ப்பதற்கு சாம்பவியும் வருகிறாள்

சோட்டாணிக்கரை பகவதியும் சோகம் தீர்க்க வருகிறாள்
சொர்க்க போக வாழ்வை வழங்க தேவி ஆடி வருகிறாள்

மாயைவிலகி மனம் திருந்த மகாதேவி வருகிறாள்
மாதுளம்பூ மேனிகொண்ட மகாகாளி வருகிறாள்

மோகம் எல்லாம் தீர்ப்பதற்கு மூகாம்பிகை வருகிறாள்
முக்திநலம் தந்திடவே சக்தி ஓடி வருகிறாள்

பஞ்சம் ஓட பாவம் ஓட பஞ்சபாணி வருகிறாள்
பாம்பணிந்த பரமனோடு பார்வதியாள் வருகிறாள்

மகிடன் தலையின் மீதிலேறி துர்க்கையாக வருகிறாள்
மலைமகளாய் கலைமகளாய் அலைமகளாய் வருகிறாள்

2 comments:

சிவத்தமிழோன் said...

பரீட்சைகள் காரணமாக நவராத்திரிக்காய் பதிவு எழுதமுடியவில்லை. எனினும் தங்கள் பதிவு கண்டு சுவைத்தேன்.

தங்க முகுந்தன் said...

சிவத்தமிழரே!
என்ன பரீட்சை என அடியேன் அறிய முடியுமா?