அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, July 4, 2009

ஜூலை 05 (நாளை)- எனது வாழ்க்கையில் மறக்க முடியாத துயரமான சம்பவம் நடந்த நாள்!

திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. அருணாசலம் தங்கத்துரை, ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி. இராஜேஸ்வரி தனபாலசிங்கம், நாமகள் கல்லூரி அதிபர் திரு. சி. ஜோசப், கொழும்பு அதிபர் கா. சீவரத்தினம், பொறியியலாளர் திரு. வெ. ரட்ணராஜா சமூகசேவகர் பெ.சி. கணேசலிங்கம் ஆகிய அறுவரும் 05.07.1997 சனிக்கிழமை மாலையில் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற புதிய 3மாடிக்கட்டடத் திறப்புவிழா முடிவுற்ற பின்னர் இடம் பெற்ற குண்டுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் எவராலும் நியாயப்படுத்த முடியாத கொடிய மனிதாபிமானமற்ற மிருகத்தனமான செயலாகும். இச்சம்பவத்தில் உயிர் நீத்த அறுவரையும் எனது வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாது! ஒரு தகவலுக்காக முன்கூட்டி இச்செய்தியைப் பிரசுரிக்கின்றேன். நாளை கட்டுரை வெளிவரும்.

No comments: