அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, July 30, 2009

நல்லூரைக் கும்பிட்டு நீபாடு - அதனாலே நாட்டிலுள்ளபிணிகள் ஓடும்! - தேரடிச் செல்லப்பரின் சீடன் சிவயோக சுவாமிகள்


நல்லூர் எசமானரும் அவரது மகன் சயந்தன் அவர்களும்

இராகம் - ஜோகினி
தாளம் ஆதி

பல்லவி

நல்லூரைக் கும்பிட்டு நீபாடு - அதனாலே
நாட்டிலுள்ளபிணிகள் ஓடும்!

அநுபல்லவி

செல்லாதே வெறுங்கையாய் செல்லப்பன் வாழ்ந்தநாடு
தேங்காயுடன் பழம் கொண்டு நீ செல்லு - (நல்லூரைக்)

சரணம்

வாடி உன் மனம் ஓடினாலும் வருத்தங்கள்
கோடி கோடியாகக் கூடினாலும் - குறைகள் வந்து
தேடி உன்னை மூடினாலும் செல்லப்பன் பாதம் சிந்தித்தால் ஓடி ஓடிப்போமே!
பெண்டு பிள்ளைகளென்று பேதைமை கொண்டு நீ
கண்ட கண்ட இடம் கலங்கி நீ திரியாதே! - (நல்லூரைக்)

1 comment:

Jana said...

எப்போதோ முடிந்த காரியம்.
"ஒரு பொல்லாப்பும் இல்லை"