அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, July 31, 2009

நல்லூர் முருகா காப்பாத்தப்பா! இந்த மோட்டுத் தமிழரை! கொலை கொள்ளை கடத்தல் புரிந்தவர்கள் வாயில் தர்மம் - திருக்குறள் எல்லாம் இப்போது வருகுதப்பா!



அகிலத்தைக் காப்பவனே!
அநீதியை அழிப்பவனே!
அக்கிரமம் செய்தோர்
அறம் உரைக்கும் நாளிதையா!

அப்பாவி மக்களை அந்தரத்தில் தவிக்கவிட்டு
அந்நிய நாட்டில் அவரொருவர் மணம் செய்தார்!
ஆண்டியாக்கியபின் அவல வாழ்வு போதாதென்று
அந்நிய நாட்டில் அரசு அமைக்கப் போகிறார்கள்!

காவலுக்கு வந்தவனை கயமையாகக் கொன்ற பின்னர்
காரணத்தைச் சொல்லவில்லை கட்டாகப் பழிசொல்வார்!
மன்னிப்பை வேண்டும் பக்குவம் மனிதர்க்கு உண்டென்ற
மாண்பான சிந்தனையை மறந்துவிட்டார் மோடரிவர்!

நாயைவிடக் கேவலமாய் மிருகம் ஒன்று உண்டென்னில்
பாயில் படுத்தவனைக் கொன்றொழித்த புலிகள்தான்!
வீடிழந்து தொழிலிழந்து அறிவுக்கல்வி தானிழந்து
வீணாக முட்கம்பிச் சிறையினுள்ளே வாடுகின்றார்!

வணங்காமண் பொருட்களும் கொழும்பில் கிடக்கிறது
வரிசையாய் மலங்கழிக்க வாக்களித்த பாவத்திற்கு
வன்னி மக்கள் துயருறும் வேதனையை அறியாமல்
வீறாப்புப் பேச்சையும் நீ அடக்க வா முருகா!

5 நிமிடத்தில் உதித்த என் தமிழ் கவி இது! எப்படி?

No comments: