அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, July 31, 2009

மீண்டும் ஒரு அசம்பாவிதம் நடக்கப் போகிறதா? என் மனம் பகர்கிறது! பதைக்கிறது நெஞ்சம்!

பக்தி என்னும் எனது 10-08-2008 பதிவிலிட்ட தினகரன் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல
1982ல் மாவை முருகனும் தெல்லிப்பழை துர்க்காதேவியும் காசிப்பிள்ளையாரும் வாழை வெட்டின்போது நிலத்தில் விழுந்தார்கள்! அதன்பின்னர் நாடளாவிய ரீதியில் பிரச்சனைகள் இடம்பெற்றன!
2006ல் எமது முருகன் தேரால் இறங்கி வரும்போது வீழ்ந்ததும் - ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று நினைத்தேன் - கடைசியில் எனக்குத்தான் நடந்தது! புலிகளின் சூடுபட்டுத் தப்பினேன்!2007இல் வழக்கம்பரை அம்பாள்!
2009இல் நேற்று எமது கருவறைப் பிள்ளையாரையே பிரட்டிவிட்டார்கள்! ஏதோ - எங்கோ - என்னவோ நடக்கப் போகிறதா? யாமறியோம் பராபரனே!
ஆடி மாதமே தமிழருக்கு வேதனைதானா?
கடவுள்தான் தமிழரைக் காப்பாற்ற வேண்டும் - தந்தை செல்வா!

No comments: