அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, July 29, 2009

கலாநிதி நீலன் - படுகொலைசெய்யப்பட்ட 10வருட நிறைவு இன்று!


இந்தப் படத்தை அனுப்பிய நிர்க்குணன் திருச்செல்வம் அவர்களுக்கு நன்றிகள்! படத்தில் அவரும் (பின்னால் நிற்கின்றார்) அவரது இளைய சகோதரன் மித்திரனும் (கிரியை செய்கின்றார்) தமது தந்தையாருக்கு பொரளை கனத்தை மைதானத்தில் இறுதிக் கிருத்தியத்தைச் செய்கின்றார்கள்!

இந்த ஈனச் செயலின் பாவமும் எம்மை சும்மாவிடாது!


அறிவுஜீவியான - அப்பாவிக்குணமுடைய இம் மாபெரும் மேதையை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் மிலேச்சத்தனமாக படுகொலைசெய்த புலிகள் இருந்த கொஞ்சநஞ்ச தமது பெயரையும் கெடுத்தக் கொண்டதுதான் உண்மை. தான் உண்டு தன் வேலையுண்டு என்று இவரும் இருந்திருக்கலாம். ஆனால் பிறநாடுகளில் அரசியல் சாசனங்களை வகுக்கும் தனது பணியை இவர் அன்றைய ஜனாதிபதி திருமதி சங்திரிகா அவர்களுடன் இணைந்து - இலங்கையில் புரையோடிப்போயுள்ள பிரச்சனைக்கு - தீர்வுகாண முற்பட்டதற்கு கிடைத்த பரிசே இன்று எம்மக்களைப் பிடித்து ஆட்டிவைக்கிறது! ஒருவகையில் இந்தப் பாவமும் எம்மை சும்மாவிடாது!
இந்தப்படத்தில் அவரது வலதுகை கீழே தொங்கிய நிலையில் இந்த மண்மீது மனித உரிமைகளை நிலைநிறுத்துவேன் என்று சத்தியஞ் செய்கிறதூ?

இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழர்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்று சொல்லி பதவிக்கு வந்த திருமதி சந்திரிகாவின் அரசியல் வழியை எவர் குறைவாக மதிப்பாக மதிப்பிட்டாலும் அவர் தனது கணவருடன் 1985 -1986 காலப் பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ததையும் விடுதலைப்புலிகள் அவர்களை திறந்த ஜீப்பில் யாழ்ப்பாண நகரங்களில் அழைத்துப் போனதையும் நேரடியாகக் கண்டவன் என்ற வகையில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறேன்.

No comments: