அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, July 27, 2009

யாழ் மாநகரசபைக்கு 4 முதல்வர்களை முதல்வராக்கிய பெருமை திரு. ஆனந்தசங்கரி அவர்களுக்கு இருக்கிறது!

திடீர் திடீரென எழும் சிந்தனைகள் நடந்து முடிந்த சத்தியமான சம்பவங்கள் - இப்போது இங்கு நேரம் காலை 10.00 மணி. இன்று 2 தடவைகள் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள எமது கட்சியின் தலைவரும் மாநகர சபையின் முதல்வர் வேட்பாளருமான திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிறகு இப்பதிவைச் சூட்டோடு சூடாக இடுகிறேன். இவ்வளவுக்கும் எனது வலதுகை பத்துப் போடப்பட்டிருக்கிறது. இடதுகையால் இவ்வளவையும் தட்டெழுத்திடவைத்த என் ஐயன் முருகனுக்கு ஒருகோடி கும்புடு! மதியம் 1.30க்கு வைத்தியசாலைக்கும் போக வேண்டும்!
கட்சியிலுள்ள பலர் யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தல்களைப்பற்றி கவனத்திலெடுக்காமல் பின்னடித்த போதிலெல்லாம் மக்களுக்காக அவர்கள் நசுக்கப்படுவதை எதிர்த்துக் குரல்கொடுக்க கட்சியை யாழ்ப்பாணத்தில் மீள மிளிரச்செய்த பெருமை இவருக்கு உண்டு!
1998 ஜனவரியில் நடந்த மாநகர சபைத் தேர்தலில் எனது பங்களிப்பும் சிறிது உண்டு. அப்போது நான் தேர்தலில் போட்டியிடவில்லை.
4 முதல்வர்களை முதல்வராக்கிய பெருமை திரு. ஆனந்தசங்கரி அவர்களுக்கு இருக்கிறது!
திருமதி சரோஜினி யோகேஸ்வரன் அவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பின் நாம் அவரது முன்னிலையில் சபை உறுப்பினர்களாக உறுதிப் பிரமாணம் செய்துகொண்டோம்.பொன் சிவபாலன் அவர்களும் ஏனைய சபை ஊழியர்கள் மற்றும் அரச படையதிகாரிகளும் நல்லூர் இந்துவிடுதிக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட போது அடுத்த முதல்வர் யாரென கேள்வி கேட்ட நிருபர் ஒருவருக்கு பதில் சொன்ன திரு. ஆனந்தசங்கரி அவர்கள் ஒருவரும் இல்லாவிட்டால் நான் ஏற்கிறேன் என்று துணிந்து சொன்னவர். இதை பத்திரிகையாளர் மாநாட்டில் அன்றைய அமைச்சரவைப் பேச்சாளரான பேராசிரியர் ஜி எல் பீரிஸ் அவர்களும் குறிப்பிட்டதை நினைவுபடுத்துவது பொருத்தம்.

உலக நாடுகளின் சர்வதேச அமைப்பான யுனெஸ்கோ விருதுபெற்ற அவரது ஆளுமையையும் அவரது கடந்த கால நடவடிக்கைகளையும் யாழ் மாநகர மக்கள் மறந்துவிட மாட்டார்கள்! மீதி நாளை!

No comments: