அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, July 5, 2009

இன்றும் நேற்றும் மனதுக்கு ஓரளவு நிம்மதி!

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினரும் எனது அரசியல் ஆசானுமாகிய அமரர் அ. தங்கத்துரை அவர்களைப்பற்றிய கட்டுரைகள் செய்திகள் சேகரிப்பில் ஈடுபட்டதுடன் அவரது குடும்பத்தவர்களுடன் தொடர்புகொண்டு அவரது பழைய நினைவுகளை மீட்டுப் பேசியதில் எனக்கு ஓரளவு மனத் திருப்தி கிடைத்தது! நேற்று அவரது லண்டனில் இருக்கும் மகளுடனும் திருமலையிலுள்ள அவரது அவரது மூத்த சகோதரர் மற்றும் மகளுடனும் இந்தியாவிலும் பிரான்சிலும் உள்ள அவரது உறவினர்களுடனும் பேசினேன். இன்றும் அவரது மகளுடனும் மகனுடனும் எமது கட்சித் தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களுடனும் (1970களில் திரு.ஆனந்தசங்கரி அவர்களும் திரு. தங்கத்துரை அவர்களும் ஒன்றாகப் பாராளுமன்றத்தில் இருந்த உறுப்பினர்கள் - ஒருவருக்கொருவர் மிகுந்த நட்புடையவர்கள்) டென்மார்க்கிலுள்ள அவரது தம்பியின் மனைவி மற்றும் மகனுடனும் பேசியதில் உண்மையான மன நிம்மதி கிடைத்தது. சுமார் 8வருட கால நெருங்கிய அந்தப் பாசப்பிணைப்பு ஒருபோதும் மனதைவிட்டு அழியாத மாறாத எண்ணங்களே!

No comments: