அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, July 27, 2009

இன்று நல்லூர் முருகனின் கொடியேற்றம் - யாழ் மாநகர சபைத் தேர்தல்! உதயசூரியனா? வீடா? வெற்றிலையா? - என் பிரார்த்தனை 1


இன்று நல்லூர் முருகனின் கொடியேற்றம் - நான் எப்போது முதன்முதல் அந்த ஆலயத்துள் காலடி எடுத்து வைத்தேனோ அன்றிலிருந்து இன்றுவரை எனது மனம் சொல் செயல்களில் அவனைப் பணிந்து ஏத்தித் தொழுது வருகிறேன்!
இன்று நான் ஓர் சங்கற்பம் செய்கிறேன்! அது என்ன என்பதை நான் முருகனின் 13ஆம் நாள் திருவிழாவன்று வெளிப்படுத்துவேன்! ஆனால் முருகனிடம் வரும் அடியார்களினால் தான் எனக்கு ஒரு மனவேதனை!

இலட்சக் கணக்கான மக்கள் உண்மையாகவே பக்தி செய்கிறார்களா? அல்லது முருகனையே (தங்களையே ஏனென்றால் சீவன்தான் அதாவது உயிர்தான் கடவுள்! அதிலும் உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை உள்ளம் விட்டோரடி நீங்கா ஒருவனை - இறைவனை)ஏமாற்றுகிறார்களா? என்பதுதான்.


ஆன்மா அழியாதென்று அன்றெனக்குச் சொன்ன மொழி நான் மறந்து போவேனொடி கிளியே நல்லூரான் தஞ்சமடி என்ற யோகரின் பாடலுடன் இன்றைய எனது பதிவை முடிக்கு முன்னர் சமயம் ஒருவனை வழிநடத்தி அவனை நன்னெறியில் நடப்பதற்கும் - அரசியல் மக்களின் பணியை செவ்வனே செய்வதற்கும் ஒரு மார்க்கம் என்ற காந்தி வழியில் சிந்திக்கும் எனது கருத்தை நினைவுபடுத்தி முடிக்கிறேன்

இது முதலாம் திருவிழாப் பிதற்றல்!

No comments: