அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, July 5, 2009

12 வருடங்களுக்கு முன்னர் நடந்த திருமலைப் பாராளுமன்ற உறுப்பினர் அ. தங்கத்துரை மற்றும் கல்லூரிச் சமூக படுகொலை

மேலே 1999இல் தினக்குரலில் வெளிவந்த எனது கட்டுரை
---------------------------------------------------------
கீழே 1998இல் அவரது மறைவுக்கு திருகோணமலையில் நடந்த அமரர்களின் நினைவில் என்னால் நிகழ்த்தப்பட்ட நினைவுக் கவி!
பாணர் மாநகர் சபையில்
பிரதிநிதிப் பதவியேற்று
பொது நிகழ்வு முதலிதுவில்
கலங்குகின்றேன் - மனம் வெதும்புகின்றேன்.
ஈனச் செயலின் கொடுமையால்
இன்று இங்கில்லாத
அமரர்கள் அறுவர்க்கும்
பாவால் அஞ்சலிகள்!
அமரர் அருணாசலம் தங்கத்துரை
நினைவுப் பணி மன்ற ஏற்பாட்டில்
அமரர்களின் முதலாம் ஆண்டு
நினைவு தினக் கூட்டத்தில்
என்னையும் நினைவுக் கவிதை நிகழ்த்த
அழைப்பித்த மன்றத்தினருக்கு நன்றி!
அமரர்கள் பணிகளை மீட்டிடக்
குழுமிய கூட்டத்தினர் நீவிர்
அனைவருக்கும் எனது
முதற்கண் வணக்கங்கள்.
அரங்கினை வழிநடத்தும் தலைவர்க்கும்
வரவேற்புரை நிகழ்த்தியவர்க்கும்
தமிழ்வாழ்த்து இசைப்பித்த இளவர்க்கும்
நினைவுரை -பாடல் - கீதம் - சிறப்புரை
நன்றி இவைகளுக்காய் வந்திட்ட பெரியோர்க்கும்
கவிதைச் சரம் நிகழ்த்திய தம்பி ஈழபாரதிக்கும்
அமரராம் எம்பியின் அருமைத் துணைவிக்கும்
உடன்பிறவாச் சகோதரன் அகிலனுக்கும்,
தங்கை தர்மினிக்கும் மற்றும்
அமரரின் குடும்பத்தவர் உறவினர்
நண்பர்கள் அனைவர்க்கும் எனது
மனம் நிறைந்த சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
கவிதை ஞானம் ஏதுமில்லா எனக்கு
நினைவுக் கவிதை தந்துள்ளார்கள்.
தமிழறிவில் யான் என் அறிவுக்கு எட்டியவாறு
உங்கள் முன் என் அரசியல் குரு
அமரர் தங்கத்துரை அவரின்
நினைவை மீட்கவுள்ளேன்.
குற்றம் நீக்கிக் குணம் கொள்ள வேண்டுகிறேன்.
அமரரை அன்பாய் அழைத்த மாமா எனும் பதத்தை தொடரும் கவியிடையில் சேர்ப்பேன். ஏற்றுக்கொள்ள தாழ்வாய் வேண்டி தொடருகிறேன் என்கவிப் பேச்சை!
89இல் நடந்ததோர் பயங்கரம்!
புல்லர்ஸ்வீதியில் புல்லட்டுக்களின் சத்தம்!
கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சூடு!
கொல்லப்பட்டனர் இருவர்! – படுகாயமடைந்தார் தலைவர்!
குறிப்பினை அறிந்து உதவிட்டார் மாமா!
அவர்தனுடன் நானும் அறிமுகமானேன்!
மாடிவீட்டில் அருகருகில் இரு அறைகளில் வாசம்!
மாமா அவர்கள் நல்ல உயரமில்லை.
ஆனால் உள்ளத்தால் உயர்ந்தவர்!
எளிமை – அன்பு புன்சிரிப்போடு
பின் கை கட்டும் தனியான மிடுக்கு!
ஆழ்ந்து சிந்திக்கையில் அரிய தவயோகி!
தம்பி என எல்லோரிடமும் சகசமாய்ப்பழகி
பற்பல வேலை புரிவார்!
தட்டெழுத்தச்சையும் தானே செய்வார்!
கோபம் என்பதை தானும் அறியார்!
அது எட்டிப் பார்க்க இடமில்லாத
பொறுமைப் பெட்டி நீங்கள் மாமா!
நடைதான் அவரது பெரும்பொழுது வாகனம்.
தூரவரும் போது செருப்புச் சத்தம் கேட்டால்
நள்ளிரவில் மாமா தானென்று நம்பி – கதவு துறப்பேன்!
கோட்டைப் புகையிரத நிலையத்தில் அப்பா அருணாசலத்தை வழியனுப்பிவைக்க நானும் சென்றேன்.
ரெயிலில் ஏறி ஊரவர் நண்பர்
தம்முடன் வாருங்கள் என அழைக்க
பின்பொருமுறை வருவேன் என்றே கூறி
அவர்தம் கைபிடித்தும் - கட்டியணைத்தும் - ரெயிலில்
அவர்தம்மோடு இருக்கையில் அமர்ந்தும்
குழந்தைபோல இருந்த காட்சி
இப்போதும் எனக்கு மறக்கவில்லை.
அரசியலில் குரு நீரே எமக்கு!
எத்தனை விளக்கம் அளிப்பீர் நமக்கு!
நேரகாலம் போவதும் தெரியாது!
அகிம்சை அன்பு மக்கள் சேவகன் - மக்களோடு இருத்தல்
நேர ஒதுக்கீட்டைத் தவிர்த்து எந்நேரமும்
அவர்பணி புரிதலே நீதி என்று கூறுவீர்கள்.
காந்தியின் மீது அளவில்லா பற்று!
அகிம்சையும் அவர்தம் மூச்சு!
தந்தை செல்வா வழிதனை ஏற்று
மூதூர்த் தொகுதி சபையில் வென்று
தமிழரசுக் கட்சியில் தொண்டும் ஆற்றி
தலைவரும் ஏகி ஏற்றம் கண்டீர்!
ஆம் இறக்கும்போது தமிழரசுக் கட்சித் தலைவர்!
காணாமற் போவோர் - கைதாவோர்
அனைவர்க்கும் பிரிவு பிரிவாய் - தொகுதி
மாவட்டம் மாகாணம் எனப் படிவம் அச்சிட்டுப்
பாங்காய்ப் பணிபுரிந்து அபலைகள் - உறவினர்
குடும்பத்தவர்க்கு ஆறுதல் அளித்தீர்!
இரக்கம் எனும்போது ஓர் கடிதம்
நினைவுக்கு - கூறுகிறேன் சபையோரே!
இது ஒன்றே போதும் மாமா
மக்களுடன் கொண்டிருந்த
ஆழமான தொடர்பு!
ஆலய வீதி பாலையூற்று
அந்தோனியம்மா எழுதிய கடிதமிது!
எனது மகன் கைது செய்யப்பட்ட விபரம் அனுப்பியிருந்தேன். எங்களோடு அனுப்பிய சிலர் கையெழுத்துப் போடவில்லை என்பதனால் திருப்பி அனுப்பியிருந்தீர்கள்!
அப்படி அக்கறையோடும் இரக்க சிந்தனையோடும்
நல்லிதய நோக்கோடும் நீங்கள் செயற்படுவதை
என்னால் உணர முடிகிறது!
மேலும் தகவல் அறிந்தால் தயவாக அறிவியுங்கள்!
தங்கள் உடல் உள ஆன்மீக தேவைகளை
நிறைவாக அளித்தருள இறைவனைப்
பிரார்த்தனை செய்கின்றேன்.
இரக்கம் - அன்பு கிராமத்தில் பிறந்த உங்கட்கும்
எமக்கும் தொட்டில் பழக்கம்!
மாமா நீங்கள் மூதூர் - நான் மூளாய்!
மூன்றெழுத்துப் பெயர்கொண்ட
சிறு கிராமத்தவர் நாம்.
பட்டணத்துக்காரரின் பகட்டு
வெறுப்பு எமக்கில்லை!
இதன் நிமித்தம்தானோ?
உங்களுடன் கூடவே பழகும்
வாய்ப்பும்இன்றும் நீங்களில்லா
வேளையும் தொடர்ந்து கொண்டிருக்கும்?
ஆகா என்ற அசுரச் சிரிப்பும்
ஓம் மச்சான் என்று உறவுமாடி
பற்பல பணிகளாற்றிய மாமா
உம்பணி எடுத்துச் சொல்ல நானும்
வந்த நேரம் போதாதெனினும்
ஓரிரு சிறப்பை அவையோர் அறிய
சொல்கிறேன் தொடர்ந்து கேட்டறிவீரே!
கேட்டறியத் தேவையில்லை உங்கள் எம்பி ஊருக்குச் செய்தது! நீங்கள்தானே அவரின் பணியை மெச்சி
இங்கு நினைவு கொள்ள வந்துள்ளீரே!
தன்னூர் - தொகுதி – மாவட்டம் மற்றும்
மாகாணம் மாநிலம் பரந்து
பின்தங்கிய பகுதிகளில் எல்லாம்
தான் பட்ட துயர் கல்வியில்
மாணவர் பெறாமல் வசதி வாய்பை
குறிப்பால் உணர்ந்து பள்ளிகளுக்கு
பன்முகப்படுத்திய நிதியின் மூலம்
பலமாடி கட்டியும் பலவளம் பெருக்கியும்
பாராதிருந்த சாலைகள் திருத்தியும்
மின்னொளி வேண்டியும் உழைத்திட்டார் பலபணி!
இன்று திருமலையில் காணும்
கல்விச் சாலைகள் எல்லாம்
மாடிக்கட்டிடம் இருப்பது அவர்
செய்துபோன அரும்பணி அன்றே!
ஆதரவற்ற சிறுவர் சிறுமியர்க்கு
சிவானந்த தபோவனம் சீராய்ச்சிறக்க
நாகரத்தினம்பிள்ளை தங்கம்மாள் நம்பிக்கை
நிதியப் பொறுப்பையேற்று பொருள் சேகரித்து
ஆண்கள் விடுதி கட்டி முடித்து அரும்பணி புரிந்தீர்!
மாமாவின் பொறுமைக்கு பம்பலப்பிட்டி
சரஸ்வதி ஹோலில் கொழும்பு வாழ் தமிழர்
பணிக்குழு நடத்திய கூட்டத்தில் நடந்த
வேறோர் சம்பவம் - கேடுகெட்ட தமிழர்
எனப்பேசி கைதட்டுவாங்கிய குமாரருக்கும்,
மலையக மக்கள் முன்னணியின் சந்திரசேகரனுக்கும்
டெலோ சிறீகாந்தாவுக்கும் ஒற்றுமை இருந்தது– பேச்சில்!
வீறான பேச்சு! நிமிடத்துக்கு ஒருதடவை
கைதட்டும் கரகோசமும் - இறுதியாக
மாமா – அமைதியும் பொறுமையும் நிறைந்த
ஆராய்ச்சிப் பேச்சு! கேடு கெட்டுப் போனால்
நல்லதுதானே! ஆவேசப் பேச்சால் கொதித்திருந்த
கூட்டம் அமைதிப் பேச்சினால் அடங்காமல்
எழுந்து கூச்சல் போட்டது! கேள்வி கேட்டது!
எந்தப் பதட்டமும் இன்றி நிதானமாய்ப் பதிலளித்தார்!
மாமா தங்கத்துரை. இறுதியாக அனைவருடனும்
அன்பாய் அளவளாவி விடைபெற்று வந்தார்.
நிர்வாகத் திறனுக்கு உங்களுக்கு நிகர் எவருமில்லை!
கூட்டணியில் அமைப்பு நிர்வாகச் செயலாளராய்
இருந்திட்ட வேளை – தனித்தனி ஒவ்வொரு
நிர்வாக உறுப்பினருடன் விவாதித்து முடிவு எடுப்பீர்கள்.
அதனால் தான் கூட்டணிக்குள்
உங்களின் கருத்தை அறிவதில்
ஆர்வம் காட்டினர் பலர்.
சண்முகா இந்த மகளிர் கல்லூரியில்
மாடிக்கட்டிடத்தைத் திறந்து வைத்துப்
பேசியபின் உள்ளம்குளிர – உறவானோர்
ஐவருடன் உலகத்தை விட்டுப் பிரித்துவைத்த
ஈனர்கள் கூட்டம் யாரென உங்களிடம் கேட்டு
என் நினைவை முடிக்கின்றேன் மாமா!
யாரென்று நீங்கள் சொல்லுங்கள் மாமா!
வணக்கம்.
ஒரு பத்திரிகைச் செய்தி
The heartbreak behind those headlines (13th July The Sunday Times news paper)
For many, an assassination is just news. For others it is a political issue. But for the family of the victim, it is heartbreak and shocked disbelief. Roshan Peiris spoke to the family of Arunasalam Thangathurai. Away from the headlines and the political ha ho she சா the trauma of a breaking heart.
She is eighty eight years old and last Saturday night her acquaintance with death, when her much-loved son Arunasalam Thangathurai was assassinated is something her mind cannot take. She sits alone with her morbid thoughts and does not eat, drink or talk to anyone but only in a soft endearing voice, full of pain she keeps repeating her beloved son's name.
The late Mr. Thangathurai's only son, twenty three-year old Ahilan, a second year CIMA student who lived with his father at the M. P's. hostel was out when the shattering news came. When he returned, there were crowds of people waiting to see him, but to lessen the shock he was first not told of the death of his father, a Deputy President of the T. U. L. F. and one dedicated to peace and harmony among all people. He was told his father was badly injured.
Ahilan said "my father being a kind man thought he had no enemies, and when he went to Trinco he refused to take his security men with him. I saw him on Saturday morning and he told me he would return by Monday as he had to attend Parliament. But he did not came back. I still cannot believe it.
"He was strict on discipline but always made me and my two sisters make our own decisions by subtly guiding us. He never smoked and did only a very little social drinking.
He often told us, the family, that he had no enemies and no threats. He was a simple man and believed that there was no evil in people.
One of my sisters is in London and the other with my mother is living with an uncle in Madras. They received the news of his death before me and returned that same night.
"I still wonder how my mother stood the journey. She is so distraught and traumatised that she said she could not speak.
"One of the last things my beloved father told me was that he was hoping to go to Trinco on July 12 (yesterday) to attend St. Mary's College annual get together.
"He was keenly conscious at all times on the need for good education for all. But now he won't make the journey. Instead he lies cremated with only his sacred ashes left for us.
"My mother is fifty-four and I just don't know how she will carry on without my father. They were very close".
His voice broke as he said "I still can't believe he is dead and feel that at any moment he will walk in with his natural smile."

No comments: