அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, July 29, 2009

மரண அறிவித்தல் - திருமதி சாந்தகுமாரி விக்னராசா (சிரேஷ்ட விரிவுரையாளர், ஆங்கிலத்துறை, யாழ்.பல்கலைக்கழகம்)


திருமதி சாந்தகுமாரி விக்னராசா நேற்று (28.07.2009) செவ்வாய்க்கிழமை மாலை கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார் இ.த.விக்னராசா (மேல் நீதிமன்ற நீதிபதி, யாழ்.மாவட்டம்) அவர் களின் அன்பு மனைவியும் சங்கீதா (U.K), சவீந்திரா (U.K), சஞ்சேந்திரா (சட்ட விரி வுரையாளர், யாழ்.பல்கலைக்கழகம்) ஆகி யோரின் அன்புத் தாயாரும் உதயசங்கரின் (U.K) அன்பு மாமியாரும் செல்வன் உதேசனின் (Timy) அம்மம்மாவும் காலஞ்சென்ற திரு.திருமதி ஒ.க.இராசதுரை தம்பதியினரின் அருமை மகளும் காலஞ்சென்ற திரு.திருமதி இராமசாமி தம்பையா தம்பதியினரின் அருமை மருமகளும் காலஞ்சென்ற வால்ரர் பாலகிருஸ்ணன் மற்றும் இராசதுரை, தாமரைகுமார், அரசகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிநிகழ்வு பற்றிப் பின்னர் அறியத்தரப் படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
இ.த.விக்னராசா (கணவர்)
(மேல் நீதிமன்ற நீதிபதி, யாழ்ப்பாணம்).
இல.1, செட்டித்தெரு, நல்லூர்,
யாழ்ப்பாணம்.
021 222 2361, 021 222 9709

கனடாவிலிருந்து விக்கி அண்ணர் - உதயன் செய்தியை அனுப்பியபின்னர் நீதவான் உயர்திரு. இ.த.விக்னராஜா அவர்களுடன் உடனடியாகவே தொடர்பு கொண்டு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தேன்! அவரது சகோதரி திருமதி பொன்மலர் இராஜேஸ்வரன் அவர்களுடன் பேசினேன். அவர்கள் சொன்னார்கள் - இப்போது நீ வரலாம்தானே! நிறைய பணிகள் செய்ய வேண்டிய நேரம் உடனே வாவென்று! உண்மை எமது பணிகளைச் செய்ய நான் ஏற்கனவே திட்டமிட்டதுபோல விரைவில் நாடு திரும்ப வேண்டும்!

தகவலுக்கு நன்றி - கனடாவிலிருக்கும் விக்கி அண்ணாவுக்கு!

No comments: